Header image alt text

sdfdகிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக வைத்திய கலாநிதி வேல்முருகு விவேகானந்தராஜா பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவின் சிபாரில்; ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார் என கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் கலாநிதி தங்கமுத்து ஜயசிங்கம் தெரிவித்துள்ளார். இன்றுமுதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது,

இந்த நியமனம் 5வருட காலத்துக்குரியதாகும். இந்தப் பல்கலைக்கழகத்தில் வேந்தராகப் பதவி வகித்த பேராசிரியை யோகா இராசநாயகத்தின் பதவிக்காலம், 2016ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் நிறைவடைந்ததை அடுத்து, அப்பதவிக்கான வெற்றிடம் நிரப்பப்படாமல் இருந்து வந்தது. Read more

w7வருடாந்த உற்சவ திருவழாவை முன்னிட்டு துவிச்சக்கரவண்டி மற்றும் குடும்பங்களுக்கு தலா ரூபா 10,000 பெறுமதியான உலர் உணவு பொருட்கள் என உதவி தேவைபடும் குடும்பங்களை தெரிவுசெய்து சண்டிலிப்பாய் சீரணி நாகபூசணி அம்மன் ஆலய நிர்வாகத்தினரால் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் ஊடாக பல்லாயிரகணக்கான உதவித்திட்டங்களை செயற்படுத்தியுள்ளார்.

ஒரு ஆலய நிர்வாகம் தாம் வாழும் சழுகக்திற்கு எப்படியான சேவைகளை செய்ய வேண்டும் என்பதை சண்டிலிப்பாய் சீரணி நாக பூசணி அம்மன் ஆலயமும் அதன் நிர்வாகமும் செயற்படுத்தியவிதம் ஏனைய ஆலயங்களும் இவர்களை பின் பற்றி தாமும் முன்னுதாரனமாக அறக்கருமங்கள் செய்ய வேண்டும் என்பதை சுட்டி காட்டுவதாக அமைந்துள்ளது. (வட்டு இந்து வாலிபர் சங்கம்) Read more

asவடமாகாண சபையின் முன்பாக வேலையற்ற பட்டதாரிகளால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. இன்று வடமாகாண சபை கட்டட தொகுதியில் அமைந்துள்ள முதலமைச்சர் அலுவலகம் மற்றும் மாகாண சபையின் அலுவலகம் ஆகியவற்றை மூடி சபை உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளை உள்ளே விடாது முற்றுகை போராட்டம் ஒன்றை வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் மேற்கொண்டனர்.

இதன்போது அவைக்கு வந்த முதலமைச்சரை உள்ளே செல்லவிடாது வாயில் கதவுகளை பூட்டி தடுத்து தமக்கு உடனடியான பதிலை வழங்குமாறு கோரினர். இதனால் அவைக்கு முதலமைச்சர் செல்லாது திரும்பிச் சென்றார். இதனால், போராட்டத்துக்கு முன்னர் வந்த சில உறுப்பினர்கள் அவைக்கு உள்ளேயும் போராட்டத்தின் பின்னர் வெளியே இருந்து உள்ளே செல்ல முடியாதவாறும் சில உறுப்பினர்கள் காணப்பட்டனர். Read more

geethaகூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர் கீதா குமாரசிங்க காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரின் இடத்துக்கு முன்னாள் அமைச்சர் பியசேன கமகே நியமிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக கட்சி தகவல்கள் தெரிவித்துள்ளன.

கீதா குமாரசிங்க இரட்டை குடியுரிமை வைத்திருப்பதால் அவர் இலங்கை பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்க முடியாதென மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து இவர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்படுவதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம், தேர்தல்கள் திணைக்களத்துக்கு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. Read more