Posted by plotenewseditor on 29 May 2017
Posted in செய்திகள்
பட்டியல் 1 தீபம் குழு
நமது மக்கள் பிரதிநிதிகள் எதற்காக பாராளுமன்றம் சென்றார்கள்?. குடும்பத்திற்காகவா? ஏழேழு பரம்பரைக்கும் சொத்து சேர்க்கவா? பாராளுமன்ற வரப்பிரசாதங்களை பெற்றுக்கொள்ளவா? பதவி, புகழ் ஆசையா? இல்லவே இல்லை. அப்படியானால்?
அவர்கள் பாராளுமன்றம் போனது, இனப்பிரச்சனைக்கு நல்லதொரு தீர்வை காண்பதற்கு. மக்களின்… அதாவது உங்களின் பிரச்சனைகளை பார்த்து பார்த்து தீர்த்து வைப்பதற்கு. வழக்கமாக இதைதானே அவர்கள் சொல்வார்கள்.
தேர்தல் மேடைகளில், ஊரில் நடக்கும் நிகழ்வுகளில் இனிக்க இனிக்க பேசும் நமது மக்கள் பிரதிநிதிகள் நிஜத்தில் எப்படியிருப்பார்கள்?. தேர்தல் மேடைகளில் ஏறி, இனத்திற்காக உயிரையும் கொடுக்க தயார் என்பதை போல அடித்துவிடுபவர்… உங்கள் பிரச்சனைகளை என்னிடம் வந்து சொல்லுங்கள் என தியாகி உருவெடுப்பவர்கள், தேர்தலின் பின்னரும் அப்படியிருப்பார்களா என்பது சந்தேகம்தான்.
Read more