Header image alt text

vinayakamoorthy_பிரபல சட்டத்தரணியும், மனித உரிமைவாதியும் தமிழ் அரசியல்தலைவர்களில் ஒருவருமான அப்பாத்துரை விநாயகமூர்த்தி அவர்களது மறைவினால் துயருற்றிருக்கும் அனைவருடனும் எமது ஆழ்ந்த துயரங்களை பகிர்ந்து கொள்கின்றோம்.

அன்பானவர், மிகவும் எளிமையானவர், முதிர்ந்த அரசியல்வாதி என்ற பண்புகளுக்கும் அப்பால் அவர் எமதினத்திற்கு ஆற்றிய கடினமான சேவைகளை இத்தருணத்தில் நெஞ்சில் நிறுத்திக் கொள்ள கடமைப்பட்டுள்ளோம். Read more

பட்டியல் 1         தீபம் குழு

tna (4)நமது மக்கள் பிரதிநிதிகள் எதற்காக பாராளுமன்றம் சென்றார்கள்?. குடும்பத்திற்காகவா? ஏழேழு பரம்பரைக்கும் சொத்து சேர்க்கவா? பாராளுமன்ற வரப்பிரசாதங்களை பெற்றுக்கொள்ளவா? பதவி, புகழ் ஆசையா? இல்லவே இல்லை. அப்படியானால்?

அவர்கள் பாராளுமன்றம் போனது, இனப்பிரச்சனைக்கு நல்லதொரு தீர்வை காண்பதற்கு. மக்களின்… அதாவது உங்களின் பிரச்சனைகளை பார்த்து பார்த்து தீர்த்து வைப்பதற்கு. வழக்கமாக இதைதானே அவர்கள் சொல்வார்கள்.
தேர்தல் மேடைகளில், ஊரில் நடக்கும் நிகழ்வுகளில் இனிக்க இனிக்க பேசும் நமது மக்கள் பிரதிநிதிகள் நிஜத்தில் எப்படியிருப்பார்கள்?. தேர்தல் மேடைகளில் ஏறி, இனத்திற்காக உயிரையும் கொடுக்க தயார் என்பதை போல அடித்துவிடுபவர்… உங்கள் பிரச்சனைகளை என்னிடம் வந்து சொல்லுங்கள் என தியாகி உருவெடுப்பவர்கள், தேர்தலின் பின்னரும் அப்படியிருப்பார்களா என்பது சந்தேகம்தான்.

Read more

Balramவட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் கொழும்புக் கிளையின் ஸ்தாபகத் தலைவரும் சமூக சேவையாளரும் இலங்கை வங்கி வெள்ளவத்தை கிளையின் முன்னாள் முகாமையாளருமான என்.பாலராமன் காலமானார்.
சுகவீனமுற்றிருந்த நிலையில் சிகிச்சை பெற்றுவந்த அவர் சிகிச்சை பலனின்றி தனது 71 வது வயதில் காலமாகியுள்ளார்.

பல்வேறு சமய, சமூகப் பணிகளில் ஈடுபட்டு வந்த இவர் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் பல்வேறு உதவிகளை வழங்கிவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்னாரது பூதவுடல்  வெள்ளவத்தை , ஈ.ஏ.கூரே மாவத்தையிலுள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இறுதிகிரியைகள் வியாழக்கிழமை நடைபெறும்.