Header image alt text

frontயாழ்ப்பாணத்திற்கான விஜயமொன்றினை மேற்கொண்டுள்ள அஸ்கிரிய பீட மகாநாயக்கர் மதிப்பிற்குரிய வராகொட சிறீ ஞானரத்ன மகாநாயக் தேரர் அவர்கள் புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் கிராமமான கந்தரோடையில் அமைந்துள்ள தொல்பியல் மையத்திற்கு நேற்று (29.08.2017) சென்றிருந்தார்.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், அஸ்கிரிய பீட மகாநாயக்கர் மதிப்பிற்குரிய வராகொட சிறீ ஞானரத்ன மகாநாயக்க தேரர் மற்றும் வட மாகாண கட்டளைத்தளபதி மேஜர்ஜெனரல் தர்சன ஹெட்டியாராய்ச்சி ஆகியோருக்கிடையிலான சந்திப்பும் இடம்பெற்றமை இங்கு குறிப்பிடத்தக்கது. Read more

P1460233யாழ். ஏழாலை சன்மார்க்க முன்பள்ளிக் கட்டிடத்திற்கான நிதியுதவி வழங்கும் நிகழ்வு நேற்று (29.08.2017) உடுவில் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. புளொட் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் அவரது பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத் திட்ட நிதியிலிருந்து மேற்படி கட்டிடத்திற்கென 3லட்சம் ரூபாய் நிதியொதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

உதவி வழங்கும் நிகழ்வில் சன்மார்க்க முன்பள்ளியின் நிர்வாகி மல்லி ஆசிரியை. பிரதேச செயலாளர் மதுமதி, முன்னாள் கிராம சேவையாளர் ஞானசபேசன் மற்றும் பிரதேச செயலக அலுவலர்களும் கலந்துகொண்டார்கள்.

iiiiஅமரர் அமிர்தலிங்கம் அவர்களின் 90ஆவது பிறந்தநாள் நினைவுப் பேருரை நிகழ்வு அமிர்தலிங்கம் நினைவு அறக்கட்டளையின் ஏற்பாட்டில் யாழ். பொதுநூலக கேட்போர் கூட்டத்தில் எதிர்வரும் 03.09.2017 ஞாயிற்றுக்கிழமை மாலை 4மணியளவில் வண.கலாநிதி சு.ஜெபநேசன் அவர்களின் தலைமையில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

இதன் ஆரம்ப நிகழ்வாக மங்கல விளக்கேற்றல், தலைவர் அமிர்தலிங்கம் அவர்களின் உருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்தல், மௌன அஞ்சலி என்பன இடம்பெற்று தமிழ் தாய் வாழ்த்து இடம்பெறவுள்ளது. தொடர்ந்து ஆசியுரைகளை நல்லை ஆதீன முதல்வர் திருஞானசம்பந்தர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், யாழ். பெரிய பள்ளிவாசல் மௌலவி ஆகியோர் வழங்கவுள்ளனர். Read more

ghghghghமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் வி.தர்மலிங்கம் அவர்களின் 32ம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு அமரர் வி.தர்மலிங்கம் நினைவுக்குழுவின் ஏற்பாட்டில் எதிர்வரும் 02.09.2017 சனிக்கிழமை காலை 7மணியளவில் யாழ். தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத்தூபிக்கு அருகாமையில் நடைபெறவுள்ளது.

நவாலியூர் திரு. க.கௌரிகாந்தன் அவர்களின் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் நினைவுச்சுடர் ஏற்றல், மௌன அஞ்சலி மற்றும் மலரஞ்சலி என்பன இடம்பெறவுள்ளதுடன், சிறப்பு அஞ்சலி உரையினை பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் மற்றும் வைத்தியக்கலாநிதி அமிர்தலிங்கம் பகீரதன் (ரவி) ஆகியோர் ஆற்றவுள்ளனர். நன்றியுரையினை அமரர் வி. தர்மலிங்கம் அவர்களின் புதல்வரும், கௌரவ பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் ஆற்றுவார்.  தனைத் தொடர்ந்து மதியம் 12மணிக்கு ஏழாலை கண்ணகை அம்மன் ஆலய மண்டபத்தில் அன்னதான நிகழ்வும் நடைபெற ஏற்பாடாகியுள்ளது. Read more

mahinda desapiriyaசுமார் இரண்டு வருடங்களுக்கும் மேலாக பிற்போடப்பட்டு வந்த உள்ளூராட்சி சபை தேர்தல்களை எதிர்வரும் டிசம்பர் மாதம் நடத்த முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த அவர், அண்மையில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட உள்ளூராட்சி சபை தேர்தல்கள் தொடர்பான சட்டம் வரும் அக்டோபர் மாதம் அமுலுக்கு வரவுள்ளதாக கூறினார். Read more

k.bawanமுல்லைத்தீவு மாவட்டம், கரைதுறைப்பற்று செயலகத்தில் அரச அதிபர் தலைமையில் இன்று (28.08.2017) நடைபெற்ற ஜனாதிபதி நடமாடும் சேவை நிகழ்வில், வட மாகாண விவசாய, நீர்ப்பாசன, கமநல, மீன்பிடி துறைகளின் அமைச்சர் க.சிவநேசன் கலந்து கொண்டிருந்தார்.

அமைச்சர் ரிசாட் பதியுதீன், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் ஆகியோரும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் மேலதிக செயலாளர் உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகளும் இதில் கலந்து கொண்டிருந்தனர். இலங்கையில் 03வது கட்டமாக வடக்கின் 04 மாவட்டங்கள் தெரிவுசெய்யப்பட்டு அதிலும் முல்லை மாவட்டத்தின் 06வதும் இறுதியுமான நடமாடும் சேவையாக இன்றைய நிகழ்வு நடைபெற்றது. Read more

wererயாழ்ப்பாணம் மண்டைத்தீவு கடற்பகுதியில் வள்ளம் கவிழ்ந்ததில் பலியான 6 மாணவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. சடலங்கள் யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று பகல் 1.30 அளவில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக மண்டைத்தீவிற்கு சென்ற 14 பேரில் 7 பேர் சிறுதீவிற்கு வள்ளத்தில் சென்றுள்ளனர்.இதன்போது வள்ளம் கவிழ்ந்ததில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். மற்றுமொருவர் தப்பிச்சென்று கடற்படையினருக்கு தகவல் வழங்கியதாக கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் லங்காநாத திசாநாயக்க குறிப்பிட்டார். உரும்பிராய், சண்டிலிப்பாய் மற்றும் கொக்குவில் பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

vvvvTHIGUVI சர்வதேச கல்விச்சேவை நிறுவனத்தின் புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் ஜெட்விங்க் விடுதியில் நேற்றையதினம் (27.08.2017)நடைபெற்றது. இந்நிகழ்வினை THIGUVI இயக்குநர்களுள் ஒருவரான செல்வரட்ணம் குலசேகரம் (குணபாலன்) தொகுத்து வழங்கியதோடு THIGUVI கல்விச்சேவை மையத்தின் இயக்குநர்களுள் ஒருவரான விஜயசேகரன் இரட்ணசபாபதி அவர்களும் உடனிருந்தார்.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வட மாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன், பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாளேந்திரன், வட மாகாண அமைச்சர் க.சிவநேசன், வட மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் மற்றும் மலேசியாவிலிருந்து (American Hospitality Academy-AHC) நிறுவனத்தின் திரு குமரேசன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தார்கள். Read more

defence seminarபூகோள மற்றும் வலயப் பாதுகாப்புப் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும், கொழும்பு பாதுகாப்புக் கருத்தரங்கு, இன்றும் நாளையும் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறுகின்றது.

இதில் சுமார் 700 வெளிநாட்டுப் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். இதன்போது, பூகோள வன்முறை பயங்கரவாதம், பயங்கரவாதத்திற்கு எதிரான பாதுகாப்புச் செயற்பாடுகள், பாதுகாப்புப் படைகள் மற்றும் பணிக்குழு சிவில் உறவுகள், மாநில உறவுகள் மற்றும் அதன் பயங்கரவாத வன்முறைகள், கிழக்கு மற்றும் மேற்கத்திய நாடுகளின் பங்களிப்புகள், பிராந்திய அமைப்புக்களின் பங்களிப்புகள், ஐக்கிய நாடுகள் மூலோபாயம், ஆகிய தலைப்புக்களில் கருத்தரங்குகள் இடம்பெற ஏற்பாடாகி இருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

votes

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள், யாவும் 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரையிலும் தள்ளிபோவதற்கான சாத்தியகூறுகள் இருப்பதாக, தேர்தல்கள் ஆணைக்குழு தகவல் தெரிவிக்கின்றது.

டிசெம்பர் மாதம் நடைபெறவிருக்கின்ற, கல்விப் பொதுத் தராதர சாதாரணத் தரப் பரீட்சைகளை கவனத்தில் கொண்டே, உள்ளூராட்சிமன்றத் தேர்தல்களை நடத்துவது தொடர்பில், அவ்வாணைக்குழு கலந்தாலோசித்து வருகின்றது. உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பிலான சட்டமூலம், நாடாளுமன்றத்தில் கடந்த வெளளிக்கிழமை நிறைவேற்றப்பட்டது. Read more