Header image alt text

manoவடக்கு, கிழக்கு இணைப்பு, சமஷ்டி மற்றும் மதச்சார்பற்ற நாடாக அறிவிக்கப்பட வேண்டுமென்பதுடன், தற்போதுள்ள வாய்ப்புக்களை தவறவிட்டு எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு நழுவ விட்ட வாய்ப்புக்களை பற்றி யோசிக்க கூடாது என்பதே எனது யோசனையாக உள்ளதென சகவாழ்வு மற்றும் கலந்துரையாடல் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

யாழ். மாவட்ட செயலகத்தில் சகவாழ்வு அமைச்சின் ஏற்பாட்டில் அரசசார்பற்ற நிறுவனங்களை சகவாழ்வுப் பாதையில் இணைப்பது தொடர்பான கலந்துரையாடல் இன்று (16.09) இடம்பெற்றது. Read more

battiமட்டக்களப்பு மாநகரசபைக்கு உட்பட்ட பாலமீன்மடு பகுதியில் மட்டக்களப்பு மாநகர சபையினால் குப்பைகளை புதைப்பதற்கு மேற்கொண்ட நடவடிக்கைக்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தன் காரணமாக கைவிடப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் கழிவுகள் திருப்பெருந்துறையில் உள்ள திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்தில் கொட்டப்பட்டுவந்த நிலையில், தீ பரவியதையடுத்து அங்கு கழிவுகள் கொட்டுவதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். Read more

koreaதடைகளை மீறி வடகொரியா இன்று மீண்டும் கிழக்கு திசை நோக்கி அணு ஆயுத சோதனை நடத்தியதாக தென்கொரியா இராணுவம் குற்றச்சாட்டி உள்ளது.

அந்த ஏவுகணை சுமார் 770 கிலோ மீட்டர் உயரத்தை அடைந்திருக்கலாம் என்றும்இ 3இ700 கிலோ மீட்டர் தூரம் பயணித்திருக்கலாம் என்றும் தென் கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது.

சர்வதேச நாடுகளின் எதிர்ப்புக்களை சந்தித்துள்ள வடகொரியா சமீப காலத்தில் பலமுறை அணு குண்டுகளையும்இ கண்டம்விட்டு கண்டம் பாயும் பல ஏவுகணைகளையும் பரிசோதித்துள்ளது. Read more