accident (3)கிளிநொச்சி புளியம்பொக்கணை பகுதியில் நேற்று இரவு 7.45 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சியில் இடம்பெற்ற ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்த போராட்டத்தில் பங்கேற்றுவிட்டு பரந்தன் பகுதியிலிருந்து புளியம்பொக்கணையில் அமைந்துள்ள வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த குறித்த இளைஞன்மீது, எதிர்த் திசையில் மணல் ஏற்றி வந்த லொறி மோதியதில் மோட்டார் சைக்கிளில் பணித்த அவர் பலியாகியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

புளியம்பொக்கனை கண்டாவளையை சேர்ந்த சுப்பிரமணியம் முரளிதரன் என்ற 24வயதுடைய இளைஞரே இதன்போது பலியானதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்