accident (2)கொழும்பு- கண்டி பிரதான வீதியின், நிட்டம்புவ, பஸ்யால பகுதியில் இன்றுகாலை இடம்பெற்ற விபத்தில், இருவர் உயிரிழந்துள்ளதோடு 35பேர் படுகாயடைந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பஸ்ஸொன்றும் கன்டர் ரக லொறியொன்றும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதன்போது, குறித்த பஸ்ஸில் பயணித்த இருவரே பலியாகியுள்ளனர். காயமடைந்தவர்கள், வதுபிட்டிவல வைத்தியசாலையில் அனுமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது, ஆட்டோ ஒன்று சேதமைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.