maithriமாகாண சபைத் தேர்தல் தொகுதிவாரி அடிப்படையில் இடம்பெறும்எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல் தொகுதிவாரி அடிப்படையில் இடம்பெறும் என ஜனாதிபதி அறிவித்துள்ளார்

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல் தொகுதிவாரி அடிப்படையில் இடம்பெறும் என ஜனாதிபதி அறிவித்துள்ளார்.இதே முறையை எதிர்வரும் காலங்களில் பொதுத்தேர்தல்களிலும் முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.

வடமத்திய மாகாண சபையின் சிறிலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் நேற்று (16) மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

இதன்போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி, விருப்பு வாக்கு முறைமை காரணமாக அரசியல்வாதிகள் நாட்டை பற்றி சிந்திப்பதை விட தனிப்பட்ட தேர்தல் வெற்றியை பற்றி சிந்திக்கின்றனர்.

இதன்காரணமாக பொதுமக்களின் எதிர்பார்ப்புகள் ஈடேராது என அவர் சுட்டிக்காட்டினார்.

அரசாங்கத்திற்குள் இருக்கும் அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் ஒரு தரப்பினர் எதிர்த்தாலும் தமது தலைமையின் அடிப்படையில் விருப்பு வாக்குக்கு பதிலாக தொகுதிவாரி அடிப்படையில் உள்ளுராட்சி சபை தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது.

இது நாட்டு மக்கள் பெற்றுக்கொண்ட வெற்றியென ஜனாதிபதி குறிப்பிட்டார்.