முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலக் பிரிவின் முள்ளியவளையில் ஏழு மகளிர் அமைப்புக்களுடான முக்கிய கலந்துரையாடல் 26.09.2022 திங்கட்கிழமை இடம்பெற்றது.
இச்சந்திப்பில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் பொருளாளர் க.சிவநேசன், தேசிய அமைப்பாளர் ஆ.ஸ்ரீஸ்கந்தராஜா, ஊடகப் பிரிவுப் பொறுப்பாளர் இரா.தயாபரன், கட்சியின் இளைஞர் அணிப் பொறுப்பாளர் யூட் பிரசாந், கட்சியின் மகளிர் அணிப் பொறுப்பாளர் க.சந்திரவதனி, கட்சியின் யாழ். மாவட்ட மகளிர் பிரிவு பொறுப்பாளர் சி.மரியரோசரி(செல்வி), டென்மார்க்கில் இருந்து வருகை தந்திருந்த புலம்பெயர் உறவான மு.காண்டீபன், கட்சியின் கனடா கிளையின் முக்கிய செயற்பாட்டாளர் தோழர் கந்தசாமி, கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளர் க.தவராஜா, கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் க.சிவலிங்கம், கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் ஜோன்சன், இணுவிலைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர்கள் காந்தன், ராஜா ஆகியோரும், மேற்படி ஏழு மகளிர் அமைப்புகளையும் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்களும் கலந்துகொண்டிருந்தார்கள்.
இதன்போது இன்றைய பொருளாதார நிலையில் மகளிர் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் பற்றியும் அவற்றிலிருந்து எவ்வாறு மீள்வது என்பது குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
