டேசி ஃபொரஸ்ட் விக்கிரமசிங்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். நிதி தூய்தாக்கல் சட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று காலை குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு சென்றிருந்த சந்தர்ப்பத்தில் அவர் கைது செய்யப்பட்டார். இந்த விசாரணை தொடர்பில் இதற்கு முன்னர் யோஷித ராஜபக்ஸ கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.