யுத்தம் காரணமாக மூடப்பட்ட இலங்கை சீமெந்து கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்கு அமைச்சர் குழுவொன்று கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டது. கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி, நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும, கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ஆகிய அமைச்சர்கள் குழுவினரே சீமெந்து தொழிற்சாலையைப் பார்வையிட்டனர்.

சீமெந்து தொழிற்சாலை முதலீட்டு ஊக்குவிப்பு சபைக்குக் கையளிக்கப்பட்டதால் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் ஆராய்வதற்காகவே இந்தக் குழுவினர் விஜயம் மேற்கொண்டனர்.

இதன்போது, வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கருணைநாதன் இளங்குமரன், எஸ்.சிறீபவானந்தராஜா, யாழ்ப்பாண மாவட்ட பதில் செயலாளர் ம.பிரதீபன், பிரதேச செயலாளர், அரச அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டனர்.

அத்துடன் குழுவினர் அச்சுவேலி கைத்தொழில் பேட்டைக்கு விஜயம் செய்து அதன் செயல்பாடுகள், தேவைப்பாடுகள் பற்றியும் கேட்டறிந்து கொண்டனர்.