வவுனியா நெளுக்குளத்தைச் சேர்ந்தவரும் கழகத்தின் வவுனியா மாவட்டப் பொருளாளருமான தோழர் சுகந்தன் (துரைராஜா சுகந்தராஜா) அவர்கள் இன்று சுகயீனம் காரணமாக இயற்கையெய்தினார் என்பதை அனைவருக்கும் மிகுந்த துயருடன் அறியத் தருகின்றோம். அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உற்றார், உறவினர், நண்பர்களோடு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாமும் இப்பெருந்துயரினை பகிர்ந்துகொண்டு அன்னாருக்கு எமது இதயபூர்வ அஞ்சலியைச் சமர்ப்பிக்கின்றோம்.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)