Header image alt text

2024 பாதீட்டில் உள்ளடக்கப்பட்டுள்ள அரச ஊழியர்களின் 10,000 ரூபாய் வேதன அதிகரிப்பு, எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இந்த தொகை ஏப்ரல் 10ஆம் திகதிக்கு முன்னர் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், குறைந்த வருமானம் பெறுவோருக்கு நிவாரணமாக வழங்கப்படவுள்ள 10 கிலோ அரிசி, எதிர்வரும் 10ஆம் திகதிக்கு முன் வழங்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். Read more

மட்டக்களப்பு வைத்தியசாலை பணிப்பாளரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் உள்ள கதிரியக்க சிகிச்சை பிரிவுகளில் ஒருநாள் அடையாள பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக அரச கதிரியக்க தொழிநுட்பவியலாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது. அதற்கமைய நாளை மறுதினம் நாடு முழுவதும் உள்ள கதிரியக்க சிகிச்சை பிரிவுகளில் பணியாற்றும் அரச கதிரியக்க தொழிநுட்பவியலாளர்கள் ஒருநாள் அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் ஈ.தர்மகீர்த்தி தெரிவித்துள்ளார். Read more

முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதலின் பின்னாலுள்ள உண்மையான சூத்திரதாரி யார் என்பது தமக்கு தெரியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அண்மையில் ஊடகங்களுக்கு கருத்தொன்றை வெளியிட்டிருந்தார். ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதலின் சூத்திரதாரி யார்? நீதிமன்றம் உத்தரவிடுமாயின் குறித்த தகவல்களை தாம் இரகசியமாக நீதிபதிகளிடம் வழங்க தயாரென அவர் தெரிவித்திருந்தார். Read more

தெல்லிப்பளை இந்து இளைஞர் மன்றத்தினால் புதிதாக புனரமைக்கப்பட்ட பேருந்து தரிப்பிட திறப்புவிழா இன்று நடைபெற்றது. நிகழ்வில் துர்க்காதேவி தேவஸ்தான தலைவர் ஆறு திருமுருகன், புளொட் தலைவர் த. சித்தார்த்தன்(பா.உ), தெல்லிப்பளை இளைஞர் சேவை மன்றத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தார்கள்.

Read more

தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் சிரேஸ்ட உபதலைவர் வேலாயுதம் நல்லநாதரின் (ஆர்ஆர்) நினைவு நிகழ்வில் நேற்றையதினம் (23.03.2024) கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “அமரர் வேலாயுதம் நல்லநாதர் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் செயலாளராக இருந்த போது கட்சிகளை இணைப்பதிலே மிகப்பெரும் பங்காற்றியிருந்தார். அவரது நினைவாக இலவச குடிநீர்திட்டம் ஒன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

Read more

தற்காலிக விசாவில் கனடாவுக்குள் பிரவேசிப்பவர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த கனேடிய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. கனேடிய குடிவரவு அமைச்சர் மார்க் மில்லர் இது தொடர்பான அறிவிப்பை விடுத்துள்ளார். கனடாவில் தற்போது 6.2 என்ற வீதத்தில் தற்காலிகக் குடியிருப்பாளர்கள் காணப்படுகின்றனர் என்றும் இந்த எண்ணிக்கையை வரவிருக்கும் இலையுதிர் காலத்தில் 5 வீதமாகக் குறைப்பதற்கு ஆளும் லிபரல் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என்றும் மார்க் மில்லர் தெரிவித்துள்ளார். கனடாவுக்குத் தற்காலிக விசாவில் வருபவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இதனால் வீட்டு வசதி சுகாதாரம் போன்றவற்றில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. Read more

இலங்கையின் குறைந்த கட்டண விமான சேவையான குவைளயுசை எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் கட்டுநாயக்க மற்றும் பங்களாதேஷின் டாக்காவுக்கு இடையில் நேரடி விமான சேவையை ஆரம்பிக்கவுள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் 16 ஆம் திகதி ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ள இந்த விமான சேவையானது ஆரம்பத்தில் வாரம் இருமுறை இடம்பெறவுள்ளது. இதற்கான ஒரு வழி கட்டணமாக 74இ600 ரூபா அறிவிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கட்டுநாயக்கவிலிருந்து டுபாய்இ மாலே மற்றும் சென்னைக்கு நேரடி விமான சேவைகளை முன்னெடுத்து வருகிறது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் நேற்று முன்தினம் 22ஆம் திகதி வௌியிட்ட கருத்து தொடர்பில் வாக்குமூலம் வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு குற்றப்புலனாய்வு திணைக்களம்(CID) அழைப்பு விடுத்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தியவரை தமக்கு தெரியுமென மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார். இந்தநிலையில், அடுத்த 48 மணித்தியாலங்களுக்குள் மைத்திரிபால சிறிசேன இந்த விடயம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவாரென பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோன் குறிப்பிட்டார்.

இலங்கையில் மக்டொனால்ட்ஸ் உணவகத்தின் கிளைகள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளன. அதற்கமைய, எதிர்வரும் ஏப்ரல் 4ஆம் திகதி வரை மக்டொனால்ட்ஸ் உணவகத்தின் 12 கிளைகள் மூடப்படும் என கொழும்பு வர்த்தக நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன், அபான்ஸ் நிறுவன பங்காளராக இருந்த மக்டொனால்ட்ஸ் நிறுவனம் அதிலிருந்து விலகியுள்ளது. அபான்ஸ் நிறுவனம், இலங்கையில் அதனுடைய தரத்தை தக்க வைக்காததே இதற்கான காரணமாக கூறப்படுகின்றது.

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் மத்தியகுழுக் கூட்டம் வவுனியாவில் கட்சியின் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களது தலைமையில் இன்று (23.03.2024) சனிக்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது. இதன்போது சமகால அரசியல் நிலைமைகள், கட்சியின் எதிர்கால செயற்பாடுகள், கட்சியின் நிர்வாக விடயங்கள் என்பன தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.

Read more