Header image alt text

06.12.2021இல் கிளிநொச்சியில் மரணித்த தோழர் திலக் (வயிரவன் சிவபாலன் – கரியாலை, நாகபடுவன்) அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவுநாள் இன்று…..

சீனாவிடம் முன்பதிவு செய்யப்பட்ட 2 நவீன Y-12-IV விமானங்கள் நாட்டை வந்தடைந்துள்ளன. குறித்த இரண்டு விமானங்களும் இலங்கை விமானப் படையிடம் நேற்று (05) உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படவுள்ளது. Y-12_IV விமானங்கள் இரத்மலானை விமானப்படை தளத்தில் தரையிறக்கப்பட்டுள்ளன.

மத்தளை சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாடுகளை ரஷ்ய – இந்திய கூட்டு தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் நேற்று(05) இடம்பெற்ற கலந்துரையாடல் வெற்றியடைந்ததாக, துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் K.D.S.ருவன்சந்திர தெரிவித்துள்ளார். அதற்கமைய, எதிர்வரும் நாட்களில் குறித்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படவுள்ளது. இதன் கீழ் மத்தளை விமான நிலையத்தின் அனைத்து நடவடிக்கைகளும் குறித்த நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படும். Read more