Header image alt text

29.06.1991இல் வவுனியா நொச்சிமோட்டையில் மரணித்த தோழர்கள் இராமநாதன் (பிச்சறால் இராசேந்திரன்- உவர்மலை), சேகர் (சித்திரவேல் செல்வராஜா- செட்டிக்குளம் ) ஆகியோரின் 34ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…..

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகரவை நியமிப்பதற்கு பதில் பொலிஸ் மாஅதிபர் பிரியந்த வீரசூரிய விடுத்த கோரிக்கைக்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கான கடிதம் இன்றைய தினம் பொலிஸ் தலைமையகத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என பொலிஸ் ஆணைக்குழுவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தேயிலை, சுற்றுலாத்துறை மற்றும் பரந்த வர்த்தக நடவடிக்கைகள் குறித்து, இலங்கை அதிக கவனம் செலுத்த தவறியுள்ளதனால், ரஷ்யாவுடனான நெருக்கமான வர்த்தக ஒத்துழைப்பினை இலங்கை இழந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை, ரஷ்யாவில் நிலைகொண்டுள்ள இலங்கை வர்த்தக மற்றும் தொழில்முறை தொழிலாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர், ஜகத் சந்திரவன்சா தெரிவித்துள்ளார்.

Read more

பண்டாரவளை – எல்ல பகுதியில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றுக்கு அருகில் வெளிநாட்டவர் உள்ளிட்ட மூவர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். சுவீடன் நாட்டைச் சேர்ந்த பெண்ணொருவரும் இலங்கையர்கள் இருவரும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலின் போது காயங்களுக்கு உள்ளான மூவரும் தியத்தலாவை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக எல்ல காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

Read more

யாழ்ப்பாணம் மாநகர சபையின் கழிவகற்றும் வாகனங்களை வழிமறித்து, கல்லூண்டாய் பகுதி மக்கள் மற்றும் மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினர்கள் இன்றையதினம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மானிப்பாய் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், மாநகர சபையினர் தாம் சேகரிக்கும் கழிவுகளை கல்லூண்டாய் பகுதியில் கொட்டுவதை எதிர்த்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது

போதைப்பொருளுக்கு அடிமையானவர்களின் புனர்வாழ்வுக்காக 03 புதிய மத்திய நிலையங்களை நிறுவ தீர்மானிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு, குருநாகல் மற்றும் மாத்தறை ஆகிய பகுதிகளில் அந்த மத்திய நிலையங்கள் நிறுவப்படவுள்ளதாக தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் பணிப்பாளர் நாயகம் சுஜித் கொத்தலாவல தெரிவித்தார். ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையாவோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து செல்வதாகவும் அவர் கூறினார். Read more

தாய்லாந்து பிரதமரை பதவி விலக கோரி பேங்கொக்கில் (Bangkok) ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. முன்னதாக, கம்போடியாவின் முன்னாள் ஜனாதிபதி மற்றும் தாய்லாந்து பிரதமர் ஆகியோர் சர்ச்சைக்குரிய விடயங்களை தொலைபேசி உரையாடலில் பகிர்ந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கலந்துரையாடலில், தாய்லாந்து இராணுவ தளபதியை விமர்சிக்கும் வகையில் தாய்லாந்து பிரதமர் ஷினவத்ரா பேசியுள்ளார்.

Read more

வவுனியா கூமாங்குளம் சித்தி விநாயகர் முன்பள்ளிக்காக புதிதாக அமைக்கப்பட்ட கட்டிடத் தொகுதியின் முதலாம் ஆண்டு நிறைவினையொட்டி பாடசாலை சமூகத்தினால் முன்பள்ளியின் ஆண்டு விழா நிகழ்வு நடத்தப்பட்டது. எமது கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் தோழர் மோகன் (க.சந்திரகுலசிங்கம்) அவர்கள் இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்வினை சிறப்பித்தபோது.

Read more

யாழ்ப்பாணம் – செம்மணி – சிந்துபாத்தி மனித புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின் கீழ், இன்று மூன்றாவது நாளாகவும் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டன. அதன்போது, இன்றைய தினம் மேலும் மூன்று மனித என்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டதாக அகழ்வு பணிகளை முன்னெடுக்கும் குழுவின் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கமைய, முதலாம் கட்ட அகழ்வு பணிகளின்போது, 19 மனித என்பு கூட்டுத் தொகுதிகளில் மீட்கப்பட்டிருந்தன.

Read more

இலங்கை உள்ளிட்ட பல உலக நாடுகளில் இடம்பெற்றதாக கூறப்படும் போர் குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் மற்றும் பொறுப்புக்கூறல் பணிகளை மேற்கொள்வதற்கான அமெரிக்காவின் நிதியுதவியை நிறுத்துமாறு வெள்ளை மாளிகை பரிந்துரைத்துள்ளது.  தகவல் அறிந்த அமெரிக்க வட்டாரங்கள் மற்றும் அரச ஆவணங்களை மேற்கோள்காட்டி ரொய்ட்டர்ஸ் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

Read more