Header image alt text

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினரும் துணை அமைச்சருமான சன் ஹையான் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், பிரதித் தலைவர் பழனி திகாம்பரம் ஆகியோரினதும், சீன தூதுக்குழுவின் அதிகாரிகளினதும் பங்குபற்றுதலுடன் எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. Read more

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பகுதியில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் நேற்று காரைநகர் பகுதியில் தலைமறைவாகியிருந்த நிலையில் காவல்துறையினர் முன்னெடுத்த சோதனையின்போது கைதுசெய்யப்பட்டுள்ளார். வட்டுக்கோட்டை – பொன்னாலை பகுதியிலுள்ள கடற்படை முகாமிற்கு முன்பாக குழுவொன்றினால் கடத்திச் செல்லப்பட்டு மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதலில்இ இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டிருந்தார். Read more

உலகளாவிய தென் பிராந்திய நாடுகள் தங்கள் சொந்த பலத்தில் கட்டியெழுப்ப வேண்டும்.

• உமாஓயா திட்டம் எரிசக்தி, நீர்ப்பாசனம் மற்றும் நீர் முகாமைத்துவம் ஆகிய துறைகளில் ஈரான்-இலங்கை ஒத்துழைப்பின் அடையாளமாகும் – இலங்கை ஜனாதிபதி

• இலங்கைக்கும் ஈரானுக்கும் இடையிலான அரசியல், பொருளாதார, வர்த்தக மற்றும் கலாச்சார உறவுகளை விரிவுபடுத்துவதில் எல்லையோ தடையோ இல்லை – ஈரான் ஜனாதிபதி

Read more

மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தின் வசதிகளைப் பயன்படுத்துவதற்காக ஆர்வம் காட்டுகின்ற தரப்பினர்களிடமிருந்து விருப்புக் கோரல்களைப் பெற்றுக் கொள்வதற்காக 2023.01.09 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, விருப்புக் கோரல்கள் பெறப்பட்டுள்ளதுடன், 5 நிறுவனங்கள் விருப்புக் கோரல்களைச் சமர்ப்பித்துள்ளன. Read more

உள்ளூராட்சி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர இதனைத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் நேற்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். Read more

25.04.1985 இல் மரணித்த தோழர் நாதன் (தேவராஜ் ஜெயசிங்கம் – மன்னார்) அவர்களின் 39ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று….

மலர்வு : 1940.06.07
உதிர்வு : 2024.04.24
யாழ். உரும்பிராய் மேற்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா ஆச்சிபுரத்தை வாழ்விடமாகக் கொண்டவரும், தோழர் சுதா (மு.நேசராசா) அவர்களின் அன்புத்தாயாருமான திருமதி முத்துவேல் கண்மணி அவர்கள் நேற்று (24.04.2024) காலமானார். அன்னையின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உற்றார், உறவினர்கள் மற்றும் நண்பர்களோடு நாமும் இப்பெருந் துயரினை பகிர்ந்து கொள்வதோடு, அன்னைக்கு எமது இதயபூர்வ அஞ்சலியை சமர்ப்பிக்கின்றோம்.

Read more

ஒருநாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று இலங்கைக்கு வருகை தந்த ஈரான் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைசி மீண்டும் ஈரான் நோக்கி புறப்பட்டார். ஈரானுக்கு சொந்தமான விசேட விமானம் மூலம் அவர் நேற்றிரவு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். நேற்று உமாஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டத்தை திறந்து வைப்பதற்காக அவர் இலங்கைக்கு வருகை தந்தார். இதேவேளை ஈரானுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. Read more

இரா.சம்பந்தனுக்கு வேதனத்துடன் 3 மாதம் விடுமுறை வழங்குவதற்கு நாடாளுமன்றில் முன்மொழியப்பட்டுள்ளது. இரா.சம்பந்தன் சுகவீனமுற்றிருப்பதால் அவருக்கு விடுமுறை வழங்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல கோரிக்கை விடுத்த நிலையிலேயே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆதரித்துள்ளார்.

  • இலங்கையின் எதிர்கால முன்னேற்றம் மற்றும் சுபீட்சம் தொடர்பில் ஈரானிய ஜனாதிபதியின் வலுவான நம்பிக்கை.
  • இலங்கையின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கும், கடன் மறுசீரமைப்பிற்கும் ஈரான் அரசாங்கம் வழங்கிய உதவிகளுக்கு இலங்கை ஜனாதிபதி நன்றி தெரிவிப்பு.
  • இரு நாடுகளுக்கும் இடையே 05 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கைச்சாத்து.

Read more