Header image alt text

வவுனியா திருநாவற்குளத்தில் 18.03.1999இல் மரணித்த திருமதி வேலாயுதம் பவானிதேவி (பவானி அன்ரி) அவர்களின் 25ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…

கொழும்பில் 18.03.2003இல் மரணித்த தோழர் ரகு (கதிர்காமநாதன் இரகுபதி) அவர்களின் 21ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…

தெற்காசிய பிராந்தியத்தில் விமான பாதுகாப்பு மேம்பாட்டிற்காக ஐரோப்பிய விமான பாதுகாப்பு முகவரகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 8ஆவது சர்வதேச ஒத்துழைப்பு மன்றத்தின் மாநாடு கொழும்பில் நாளை ஆரம்பமாகவுள்ளது. கொழும்பில் உள்ள விருந்தகமொன்றில் தொடர்ச்சியாக 3 நாட்கள் இந்த மாநாடு இடம்பெறவுள்ளது. குறித்த மாநாட்டில் ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 100 சிரேஷ்ட விமான போக்குவரத்து நிபுணர்கள் கலந்துக்கொள்ளவுள்ளனர். சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபையின் அனுசரணையுடன் இந்த மாநாடு இடம்பெறவுள்ளது.

ஜப்பான் அரசாங்கம் 1,600 மில்லியன் ஜப்பானிய யென்னை இலங்கைக்கு வழங்கவுள்ளது. இது இலங்கை நாணய பெறுமதியில் 3.3 பில்லியன் ரூபாய் ஆகும். இரண்டு நாடுகளுக்கு இடையில் நிலவும் இருதரப்பு பொருளாதார உறவினை வலுப்படுத்தும் வகையில் குறித்த தொகை வழங்கப்படவுள்ளதாக நிதி பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சு தெரிவித்துள்ளது. மின் உற்பத்தி உபகரணங்களை கொள்வனவு செய்தல், மகப்பேற்று சிகிச்சையை மேம்படுத்துதல், கடலோர காவல்துறையினை மேம்படுத்துதல் போன்ற செயற்பாடுகளுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

சுகாதார தொழிற்சங்கங்கள் நாளைய தினம் முன்னெடுக்க தீர்மானித்திருந்த பணிபுறக்கணிப்பு ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த ஒன்றிணைந்த தொழிற்சங்கங்களின் ஏற்பாட்டாளர் ரவி குமுதேஷ் இதனை தெரிவித்துள்ளார். இன்று காலை இடம்பெற்ற ஒன்றிணைந்த தொழிற்சங்கங்களின் தலைவர்களின் கூட்டத்திற்கு பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சுகாதார அமைச்சின் எழுத்து மூல கோரிக்கையை கருத்திற் கொண்டு குறித்த பணிபுறக்கணிப்பு ஒருவாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் மற்றும், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் உபதலைவரும், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும், சிரேஷ்ட போராளியுமான *தோழர் வேலாயுதம் நல்லநாதர் (இராகவன், ஆர்.ஆர்)* அவர்களின் நினைவாக, உணர்வுப் பகிர்வுக் கூட்டம் லண்டனில் நடைபெறவுள்ளது.
காலம் : *24.03.2024* ஞாயிற்றுக்கிழமை
நேரம் : *மாலை 3 மணி முதல் 7* மணிவரை

Read more

தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவராக அருண் தம்பிமுத்து நியமிக்கப்பட்டுள்ளார். வவுனியாவில் நேற்று இடம்பெற்ற தமிழர் விடுதலை கூட்டணியின் பொதுச்சபையின் போது இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக அதன் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார். இதுவரை காலம் தலைவர் பதவிக்கு இழுபறி நிலை நிலவிய நிலையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

குடிவரவு மற்றும் குடியகல்வு பிரதி கட்டுப்பாட்டாளர் மற்றும் முன்னாள் பிரதி கட்டுப்பாட்டாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதாள உலக குழு உறுப்பினர்களான ஹினாட்டியான மகேஷ் மற்றும் ஷான் அரோஷ் லியனகே எனப்படும் மத்துகம ஷான் ஆகியோருக்கு எதிராக பொய்யான தகவல்களின் அடிப்படையில் கடவுச்சீட்டு வழங்கிய குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ். சுன்னாகம் கந்தரோடை தமிழ் கந்தையா வித்தியாசாலையின் இல்லங்களுக்கு இடையேயான வருடாந்த விளையாட்டுப் போட்டி 14.03.2024 பிற்பகல் 1மணியளவில் பாடசாலை மைதானத்தில் ஆரம்பமாகி நடைபெற்றது. பாடசாலையின் அதிபர் திருமதி சைலினி பிரதீபன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார்.

Read more

வெடுக்குநாறி மலையில் ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் மஹா சிவராத்திரி தினத்தன்று கைது செய்யப்பட்ட 8 பேருக்கும் நீதிக் கோரி யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா வரையில் வாகன பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றிலில் இருந்து வவுனியா வரையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்ட தரப்பினரால் இந்த வாகனப் பேரணி முன்னெடுக்கப்படுகிறது. இன்று காலை 8 மணியளவில் குறித்த பேரணி ஆரம்பிக்கப்பட்டது. Read more