சில பல்கலைக்கழகங்களின் மாணவர்கள் இன்று முன்னெடுத்த எதிர்ப்பு நடவடிக்கைகளை கலைப்பதற்கு பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டனர். ஹோமாகம ஆதார வைத்தியசாலையை தனியார் பல்கலைக்கழகமொன்றின் பயிற்சிகளுக்காக பயன்படுத்துவதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்தை கண்டித்தே மாணவர்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்த எதிர்ப்புப் பேரணி பல்கலைக்கழகத்திற்கு அருகிலிருந்து விஜேராம சந்தியை வந்தடைந்தது. Read more