Header image alt text

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள், தமிழ் பொது வேட்பாளர் ஒருவருக்கு வாக்களிக்க வேண்டும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். தமிழ் மக்களின் இருப்பை உறுதி செய்வதற்காக, தமிழ் பொது வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவு வழங்க வேண்டிய தேவையுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். Read more

அரச விடுமுறை தினமான எதிர்வரும் 12ஆம் திகதி அஞ்சல் பொதிகளை விநியோகிப்பதற்கான விசேட சேவையொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக அஞ்சல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அஞ்சல்மா அதிபர் டபிள்யூ.எம்.ஆர்.பி சத்குமார விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டு மற்றும் ரமழான் பண்டிகையுடன் வரும் நீண்ட வார இறுதி விடுமுறையில் வாடிக்கையாளர்களின் தேவை மற்றும் வசதியைக் கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. Read more

தரமற்ற மருந்து கொள்வனவு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேர் எதிர்வரும் 22ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள் இன்று  மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேரை எதிர்வரும் 22ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.