Posted by plotenewseditor on 10 April 2024
Posted in செய்திகள்
Posted by plotenewseditor on 10 April 2024
Posted in செய்திகள்
ஜனாதிபதி தேர்தலில் பொது தமிழ் வேட்பாளரை நிறுத்துவது சாத்தியமற்றது எனஇ இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தரும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் அவைத் தலைவருமான சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் கல்வியங்காட்டில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று (09) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், எதிர்வரும் ஐனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பில் பொது வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்த வேண்டும் என்பது தொடர்பாக பரவலாக பேசப்பட்டு வருகின்றது. Read more
Posted by plotenewseditor on 10 April 2024
Posted in செய்திகள்
அண்மையில் கல்வி அமைச்சின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தின் மீதான சைபர் தாக்குதல் இலங்கையில் உள்ள இணைய இணைப்பின் ஊடாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதை அடையாளம் காண உள்நாட்டு சேவை வழங்குனர்களிடம் தகவல் கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த வெள்ளிக்கிழமை சைபர் தாக்குதலுக்கு உள்ளான கல்வி அமைச்சின் இணையத்தளம் தொடர்ந்தும் செயலிழந்துள்ளது. இது தொடர்பான அனைத்து விபரங்களும் அடங்கிய அறிக்கை இன்று கல்வி அமைச்சிடம் கையளிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.