Header image alt text

பாகிஸ்தானின் இலங்கைக்கான புதிய உயர்ஸ்தானிகர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் பாஹீமுல் அஸீஸ் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தனவை பாராளுமன்றத்தில் நேற்று சந்தித்தார். இந்த சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர மற்றும் பாகிஸ்தானின் பிரதி உயர்ஸ்தானிகர் வாஜித் ஹஸன் ஹஷ்மி ஆகியோரும் கலந்துகொண்டனர். பரஸ்பர நலன்கள் தொடர்பில் கவனம் செலுத்தி அவர்களுக்கிடையில் இடம்பெற்ற சிநேகபூர்வ கலந்துரையாடலில், இரு நாடுகளுக்கும் இடையில் நிலவி வரும் உறுதியான நட்புறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

Read more

துயர் பகிர்வு!

Posted by plotenewseditor on 25 April 2024
Posted in செய்திகள் 

அமரர் முத்துவேல் கண்மணி அவர்கள்
மலர்வு : 1940.06.07  

உதிர்வு : 2024.04.24

யாழ். உரும்பிராய் மேற்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா ஆச்சிபுரத்தை வாழ்விடமாகக் கொண்டவரும், தோழர் சுதா (மு.நேசராசா) அவர்களின் அன்புத்தாயாருமான திருமதி முத்துவேல் கண்மணி அவர்கள் நேற்று (24.04.2024) காலமானார். Read more

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிர்வாகத் தெரிவு தொடர்பான வழக்கு விசாரணைகள் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. குறித்த வழக்கு இன்று திருகோணமலை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது குறித்த வழக்கு மீதான விசாரணைகள் மே மாதம் 31ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் சபைக் கூட்டத்தின் போது அதன் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனும் பொதுச் செயலாளராக ச.குகதாசனும் தெரிவு செய்யப்பட்டனர். Read more

24.04.1984ல் மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் மரணித்த பொதுவுடைமைவாதி, காந்தீய செயற்பாட்டாளர், ‘விடுதலை’ இதழாசிரியர், கழகத்தின் தளபதி தோழர் பார்த்தன் (இராஜதுரை ஜெயச்சந்திரன்) அவர்களின் 40ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று….
தோழர் பார்த்தன்
இரா.ஜெயச்சந்திரன்
மலர்வு – 06.07.1959
உதிர்வு – 24.04.1984
பாட்டாளி மக்களின் மறுவாழ்விற்காகவும் பாதுகாப்புக்காகவும் அயராது பாடுபட்டவர்.

Read more

இலங்கைக்கு வருகைதந்த ஈரானிய உள்துறை அமைச்சரை கைது செய்ய வேண்டும் என ஆர்ஜென்டினா கோரியிருந்த நிலையில், குறித்த அமைச்சர் ஜனாதிபதி இப்ராஹிம் ரைஸியுடன் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவில்லை என ஏஎஃப்பி செய்திச் சேவை குறிப்பிட்டுள்ளது. 1994ஆம் ஆண்டு ஆர்ஜென்டினாவின் தலைநகரில் யூத சமூகத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் 85 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்கு ஈரானின் தற்போதைய உள்துறை அமைச்சர் அஹமட் வஹ்டியே காரணம் என குற்றம்சாட்டப்பட்டுள்ளது. Read more

இரு நாடுகளுக்கும் இடையில் 05 புரித்துணர்வு ஒப்பந்தங்களை கைசாத்திடத் தீர்மானம்.

  • தேசிய மின் கட்டமைப்பிற்கு 290 கிகாவோட் (290 GWh) மின் சக்தி.
  • 4500 ஹெக்டயர் புதிய , 1500 ஹெக்டயர் பழைய விவசாய நிலங்களுக்கு நீர்ப்பாசன வசதி.
  • பதுளை, மொனராகலை, ஹம்பாந்தோட்டையின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படும்.

Read more

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ நியமிக்கப்பட்டமைக்கு எதிராக, சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். விஜயதாச ராஜபக்ஷ பதில் தலைவராக நியமிக்கப்பட்டமை, சட்டத்திற்கு புறம்பானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளைஇ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் பெயரை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. Read more

ஸ்ரீ லங்கன் விமானச் சேவை நிறுவனம் உள்ளிட்ட 5 அரச நிறுவனங்களின் தலைவர்கள் இந்தவாரம் கோப் எனப்படும் அரச பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், தேசிய வர்த்தக முகாமைத்துவ நிறுவனம் மற்றும் மஹாபொல உயர் கல்வி உதவித்தொகை நிதியம் ஆகிய நிறுவனங்களின் தலைவர்களே குறித்த குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச விவகாரங்களுக்கான துணை அமைச்சர் சன் ஹையன்(Sun Haiyan) இன்று நாட்டிற்கு வருகை தரவுள்ளார். 2 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அவர் நாட்டிற்கு வருகை தருவதாக தினகரன் பத்திரிகை செய்தி வௌியிட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் அரசாங்கத்தின் உயர்மட்ட பிரதிநிதிகளை அவர் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. Read more

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் பெயரை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் பெயர் மற்றும் நிறைவேற்று குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கவுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்று குழுக் கூட்டம் நேற்று எத்துல்கோட்டே பகுதியிலுள்ள விருந்தகம் ஒன்றில் இடம்பெற்றது. Read more