இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிர்வாகத் தெரிவு தொடர்பான வழக்கு விசாரணைகள் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. குறித்த வழக்கு இன்று திருகோணமலை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது குறித்த வழக்கு மீதான விசாரணைகள் மே மாதம் 31ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் சபைக் கூட்டத்தின் போது அதன் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனும் பொதுச் செயலாளராக ச.குகதாசனும் தெரிவு செய்யப்பட்டனர்.

இந்த நியமனம் கட்சியின் யாப்பை மீறி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறி வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கின் பிரதிவாதிகளாக 7 பேர் பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.