பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தன்னிச்சையாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரையும் அரசாங்கம் உடனடியாக விடுவிக்க வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது. இந்த சட்டம் இரத்து செய்யப்படும் வரை அதன் பயன்பாட்டிற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது. இறுதி யுத்தத்தில் உயிரிழந்தோரை நினைவுகூர்ந்ததற்காக 9 பேர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து கண்காணிப்பாகம் அறிக்கையொன்றை வௌியிட்டுள்ளது. Read more
இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளரும் இராணுவ ஆலோசகருமான எயார் மார்சல் சந்தீப் சிங்கை(Sandeep Singh) சந்தித்துள்ளார். இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு, முப்படைகளுக்கு இடையிலான பயிற்சி தொகுதிகளை மேம்படுத்துதல், புதிய தொழில்நுட்பம், ஆயுதப் படைகளின் நவீன மயமாக்கல் மற்றும் கூட்டுப் பயிற்சிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இதன்போது இருவரும் கலந்துரையாடியுள்ளனர்.