Header image alt text

நன்றி தலைவர் அவர்களே!
வெளிவிவகார அமைச்சின் கொள்கை என்பது இலங்கை போன்ற மிகச்சிறிய நாட்டிற்கு மிக அவதானமாக இருக்க வேண்டிய விடயமாகும். இன்று பூகோள வல்லாதிக்க சக்தி ஒன்றே ஒன்றுதான் அது அமெரிக்கா. பிராந்திய வல்லாதிக்க சக்திகள் எல்லாம் இங்கு தங்களுடைய ஆதிக்கத்தைச் செலுத்துவதற்கு முயன்றுகொண்டிருக்கின்ற இந்த வேளையிலே நாங்கள் மிகக் கவனமாக இருக்கவேண்டும்.

Read more

08-12-2020 இல் மரணித்த தோழர் கிட்டு (இராமசாமி கிருஷ்ணபிள்ளை) அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவுநாள் இன்று…..
மலர்வு 1960.03.22
உதிர்வு 2020.12.08
வவுனியா பாவற்குளம் 4ம் யூனிட்டை பிறப்பிடமாகவும் எல்லப்பர் மருதன்குளத்தை வாழ்விடமாகவும் கொண்ட தோழர் கிட்டு அவர்கள் ஆரம்ப காலங்களில் கழகத்தின் பாவற்குளம் பிரதேச பொறுப்பாளராக செயற்பட்டு வந்ததோடு, பின்னர் கட்சி உறுப்பினராக கட்சிப் பணிகளில் மரணிக்கும் வரை மிகுந்த ஈடுபாட்டுடன் செயற்பட்டு வந்தார்.

உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான சுயாதீன ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நிலைமாறுகால நீதி மற்றும் யுத்தத்திற்கு பின்னரான நல்லிணக்கத்தை நோக்கிய ஒரு முக்கியமான படியாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.  முன்மொழியப்பட்ட ஆணைக்குழு பாராளுமன்ற சட்டத்தின் மூலம் நிறுவப்படுவதோடு, சம்பந்தப்பட்ட தரப்பினர்களுடன் கலந்தாலோசித்து குறித்த சட்டமூலம் தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. Read more

யாழ்ப்பாணத்தில் வாள் , நீளமான கத்தி தயாரிக்கும் இடங்களைத் தேடி விசேட சுற்றிவளைப்புகளை தீவிரப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணத்தில் அதிகரித்து வருகின்ற வாள் வெட்டு சம்பவங்களை கட்டுபடுத்தும் நோக்கில்,  இந்த செயற்பாடு  முன்னெடுக்கப்பட்டு வருவதாக, யாழ். பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் விஷாந்த தெரிவித்தார். கடந்த சில வாரங்களாக யாழ். குடாநாட்டில் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளதால், சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளதாக, யாழ். பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுட்டிக்காட்டினார். Read more