Header image alt text

எதிர்வரும் 12 ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்துடன் விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார். கலந்துரையாடலின் பின்னர் இரண்டாம் தவணை கடனை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அமைச்சர் இதனை தெரிவித்தார். கடன் மறுசீரமைப்பிற்குப் பின்னர், நாடு வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டு விடும் என்பதை உலகிற்கு அறிவிக்க முடியும் எனவும் நாட்டை நெருக்கடி நிலையிலிருந்து மீட்டெடுக்க அரசாங்கம் கட்டம் கட்டமாக நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் கூறினார். Read more

வௌிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி இன்று (09) முதல் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை கட்டாருக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.  டோஹா மன்ற மாநாட்டில் பங்கேற்பதற்காக அவர் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார். டோஹா மன்ற மாநாடானது (Doha Forum) கட்டார் அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்படும் சர்வதேச களம் ஆகும்.  சர்வதேசம் முகங்கொடுக்கும் தீர்மானமிக்க சவால்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக, தலைவர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் ஒன்றிணைந்து செயற்பாட்டு திட்டங்களை உருவாக்குவதே இதன் நோக்கமாகும். Read more