சர்வதேச நாணய நிதியத்துடன்(IMF) முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டத்தின் போது பொறுப்புடன் செயற்படுமாறு, அனைத்து அரசியல் தலைவர்களிடமும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார். கண்டி மாநகர சபையின் “கரலிய அரங்கம்” மற்றும் கலைக்கூடம் என்பவற்றை திறந்து வைக்கும் நிகழ்வில் ஜனாதிபதி இன்று(17) கலந்து கொண்டார். கண்டி மாநகர சபையினால் 2018 ஆம் ஆண்டு இதற்கான நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டதுடன், இதற்காக மாநகர சபையினால் 600 மில்லியன் ரூபா நிதி செலவிடப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டில் ஜனாதிபதி தேர்தல் கட்டாயம் நடத்தப்படும் என நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அரசியலமைப்பின் படிஇ கட்டாயம் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனினும் பொதுத் தேர்தல் தொடர்பில் இதுவரை எவ்வித கலந்துரையாடல்களையும் மேற்கொள்ளவில்லை.