Header image alt text

முத்தையன் கட்டு இடதுகரை ஜீவநகரைச் சேர்ந்த செல்வி அழகர்சாமி வையாலினி என்கிற
வறிய பாடசாலை மாணவிக்கு உதவும் முகமாக ஜெர்மனியில் வசிக்கும் செல்வி சிவகுமாரன் கோபிகா அவர்கள் தனது பிறந்த தினமாகிய இன்று பாடசாலை செல்வதற்காக துவிச்சக்கர வண்டி அன்பளிப்பாக வழங்கியுள்ளார். உதவி வழங்கும் நிகழ்வில் எமது கட்சியின் பொருளாளர் க. சிவநேசன், கட்சியின் ஊடகப்பிரிவு பொறுப்பாளர் இரா. தயாபரன், கட்சியின் இளைஞர் பிரிவு பொறுப்பாளர் யூட்சன், கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் க. சிவலிங்கம் மாஸ்டர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள்.

Read more

19.12.1990இல் மரணித்த தோழர் சந்திரன் (க.விவேகராசா) அவர்களின் 33ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் மட்டக்களப்பு – வந்தாறுமூலையில் கைது செய்யப்பட்ட பாடசாலை மாணவன் உள்ளிட்ட நான்கு பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணை இன்று (19) வாழைச்சேனை நீதிமன்றில் இடம்பெற்ற போது பிணை வழங்கப்பட்டுள்ளது. சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனைக்கு அமைவாக, வாழைச்சேனை பொலிஸாரினால் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து வாழைச்சேனை நீதவான் M.I.M.ரிஸ்வான் சந்தேகநபர்கள் நால்வருக்கும் பிணை வழங்கினார். Read more

சிறப்பு பிரிவு கைதிகளை ஏற்றிச்செல்லும் சிறைச்சாலை பஸ்களில் CCTV கெமராக்களைப் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தும் நோக்கில் பஸ்களில் இவ்வாறு CCTV கெமராக்கள் பொருத்தப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் காமினி B திசாநாயக்க தெரிவித்தார்.. சிறைச்சாலைகளில் இருந்து கைதிகள் வௌியில் அழைத்துச் செல்லப்படும் சந்தர்ப்பங்களில் அவர்களின் செயற்பாடுகள் தொடர்பில் இதனூடாக கண்காணிக்க முடியும் என அவர் குறிப்பிட்டார். Read more