Header image alt text

அமரர் தோழர் முருகேசு நெல்சன்
மலர்வு :1981.09.06
உதிர்வு : 1999.12.20

கடந்த வருடம் முதல் இதுவரையான காலப்பகுதியில் விசேட வைத்தியர்கள் உள்ளிட்ட 1500-இற்கும் மேற்பட்ட வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும் 5000 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறும் எதிர்பார்ப்பில் காத்திருப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர், வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்தார். நாட்டிலுள்ள 40 சிறிய வைத்தியசாலைகள் மூடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

மியன்மாரில் தாய்லாந்து எல்லை அருகே பயங்கரவாத குழுவொன்றின் சைபர் அடிமைகளாக பலவந்தமாக சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த இலங்கை இளைஞர்கள் ஐவர் தப்பியுள்ளனர். மியன்மார் – தாய்லாந்து எல்லையில் உள்ள குறித்த பகுதி கூகுள் வரைபடத்தில் ‘Cybercriminal Area’ எனப்படும் சைபர் குற்றப் பிரதேசமாகவே அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. மியன்மாரின் மியாவெட்டி நகரில் இருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவிலுள்ள குறித்த பிரதேசம் முழுமையாக பயங்கரவாத குழுவொன்றின் கட்டுப்பாட்டில் உள்ளது. தாய்லாந்தில் கணினி துறையில் தொழில் வாய்ப்புகளை வழங்குவதாகக்கூறி அழைத்துச் செல்லப்பட்ட 50-க்கும் மேற்பட்ட இலங்கையின் இளைஞர், யுவதிகள் தொடர்ந்தும் இங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். Read more