யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவி ஒருவருக்கு செலுத்தப்பட்ட மருந்தினால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக உயிரிழந்துள்ளதாக மருத்துவ பரிசோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் இறுதியாண்டில் கல்வி கற்றுவந்த 25 வயதுடைய மாணவியே இவ்வாறு உயிரிழந்தார். காய்ச்சல் காரணமாக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்றைய தினம் உயிரிழந்தார். இந்தநிலையில், மாணவியின் மரணம் தொடர்பான உடற்கூற்று பரிசோதனை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று இடம்பெற்றது. Read more
நத்தார் பண்டிகையை முன்னிட்டு 1,004 கைதிகளுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. 15 பெண் கைதிகளும் 989 ஆண் கைதிகளும் அதில் அடங்குகின்றனர். அதற்கமைய, பல்லேகல சிறைச்சாலையிலிருந்து 162 கைதிகளும் அனுராதபுரம் சிறைச்சாலையிலிருந்து 78 கைதிகளும் வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து 42 கைதிகளும் இவ்வாறு விடுதலை செய்யப்படவுள்ளனர். நாட்டின் சகல சிறைச்சாலைகளையும் உள்ளடக்கிய வகையில் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதுடன் இவர்கள் நாளை(25) விடுதலை செய்யப்படவுள்ளனர்.