Header image alt text

ஆழ்ந்த அனுதாபங்கள்

Posted by plotenewseditor on 29 December 2023
Posted in செய்திகள் 

தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தின் நிறுவனத் தலைவர் விஜயகாந்த் அவர்களின் மறைவுக்கு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறது. திரையுலக வாழ்க்கைக்கு வரமுன்பும் வந்த பின்பும், அரசியல் வாழ்க்கையிலும் என்றும் தமிழ் மொழி மீதும் தமிழர்கள் மீதும் மாறாத பற்றுக் கொண்டிருந்த ‘கப்டன்’ விஜயகாந்த் அவர்கள் இலங்கைத் தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை உறுதியாக ஆதரித்திருந்ததோடு போராளிகள் அமைப்புகளுடன் ஆத்மார்த்தமான உறவினைக் கொண்டிருந்தார். போராளிகளின் தேவையுணர்ந்து பெறுமதிமிக்க உதவிகளையும் வழங்கியிருந்தார்.

Read more

துயர் பகிர்வோம்!

Posted by plotenewseditor on 29 December 2023
Posted in செய்திகள் 

கழகத் தோழர்கள் செல்வன், ஆனந்தபாபு ஆகியோரின் சகோதரரான இராமசாமி செல்வநேசன் அவர்கள் இன்று காலமானார்.
அவரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களோடு நாமும் இப்பெருந்துயரினை பகிர்ந்து கொண்டு அன்னாருக்கு எமது இதயபூர்வ அஞ்சலியையும் சமர்ப்பிக்கின்றோம்.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(DPLF)
இவ் ஆண்டின் சிறந்த சன சமூகநிலையத்திற்கான விருதையும் சனசமூக நிலையங்களுக்கிடையிலான மதிப்பீட்டில் புள்ளி அடிப்படையில் முதலாம் இடத்தையும் சமூக ஆர்வலர் இரத்தினசிங்கம் கெங்காதரன் தலைமையிலான ஸ்ரீ துர்க்கா சனசமூக நிலையம் பெற்றுக்கொண்டுள்ளது. மீள் குடியேற்றம் செய்யப்பட்ட புன்னாலைக்கட்டுவன் வடக்குப் பிரதேசத்தில் யுத்தத்தால் சேதமடைந்தது முற்று முழுதாக அழிவுற்ற ஒரு சன சமூக நிலையம் மீள் எழுச்சி பெற்று இன்று முதலாம் இடத்தைப் பெற்று சிறந்த சனசமூக நிலையத்திற்கான விருதையும் பெற்றுள்ளமையானது அந்த நிலையத்தின் சிறந்த தலைமைத்துவத்திற்கும் உறுப்பினர்களின் ஒற்றுமைக்கும் கிடைத்த பரிசாகும் என இவ் விருது விழாவில் பிரதம அதிதியால் பராட்டி மெச்சுரையும் வழங்கப்பட்டது.

Read more

ஸ்ரீலங்கன் விமான நிறுவன கொள்வனவு தொடர்பாக முதலீட்டாளர்களின் யோசனையை பொற்றுக்கொள்வதற்கான கால அவகாசம் இரண்டாவது தடவையாகவும் நீடிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 16 ஆம் திகதி வரை கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து , விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் K.D.S.ருவன்சந்த்ர தெரிவித்துள்ளார். முன்னதாக, டிசம்பர் மாதத்துடன் நிறைவடையவிருந்த கால அவகாசம், ஜனவரி 08 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டிருந்தது.  பலருக்கு வாய்ப்பளிக்கும் வகையில், முதலீட்டாளர்களிடமிருந்து யோசனைகளை பெற்றுக்கொள்வதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

‘யுக்திய’ சுற்றிவளைப்பில் இதுவரையான காலப்பகுதியில் 17,837 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த மாதம் 17 ஆம் திகதியிலிருந்து இன்று (29) அதிகாலை 12.30 வரையான காலப்பகுதியில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 10 கிலோ 510 கிராம் ஹெரோயின், 06 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள், 288 கிலோகிராம் கஞ்சா, 118 கிலோ 50 கிராம் மாவா, 35 கிலோகிராம் ஏஷ் போதைப்பொருள் என்பன பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன. Read more

நாட்டில் மற்றுமொரு கொவிட் மரணம் பதிவாகியுள்ளது. கம்பஹா போதனா வைத்தியசாலையில் இந்த கொவிட் மரணம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்துக்குள் பதிவான இரண்டாவது கொவிட் மரணம் இதுவாகும். இதேவேளை, இந்தியாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 702 பேருக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதுடன், 06 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மத்திய சுகாதார அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா, கர்நாடகம், கேரளம், மேற்கு வங்கம் மற்றும் புதுடெல்லி பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். Read more

28.12.1991இல் பெரியபோரதீவில் மரணித்த தோழர் செல்வம் (சவரியான் குரூஸ் – தாழ்வுபாடு) அவர்களின் 32ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…

இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் தலைவராக நீதிபதி W.M.N.P.நீல் இத்தவெல நியமிக்கப்பட்டுள்ளார். ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. சைத்ய குணசேகர மற்றும் பர்னார்ட் ராஜபக்ஸ ஆகியோர் இந்த ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

27.12.2006இல் மரணித்த கழகத்தின் மட்டக்களப்பு – அம்பாறை பிராந்திய முன்னாள் பொறுப்பாளர் தோழர் மாமா (கணபதிப்பிள்ளை பாக்கியராஜ்- களுதாவளை), தோழர் கரிகாலன் (இராஜரட்ணம் ராஜேந்திரன் – தம்பட்டை) ஆகியோரின் 17ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…

வட மாகாணத்தில் அண்மையில் வழங்கப்பட்ட அதிபர் சேவைகள் நியமனத்தில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து இலங்கை அதிபர் சேவை சங்கத்தினால் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவிற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. தமக்கான நியமனம் உரிய முறையில் வழங்கப்பட வேண்டும் எனவும், இலங்கை மனித உரிமை ஆணைக்குழு அதற்கான நிவாரணத்தை பெற்றுத்தர வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இலங்கை அதிபர் சேவை சங்கத்தின் தலைவர் சிரச ஆரியவர்த்தன தலைமையில், வட மாகாணத்தின் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அதிபர் சேவை தரத்திற்கு உள்வாங்கப்பட்ட அதிபர்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். Read more