27.12.1987இல் முருங்கனில் மரணித்த தோழர்கள் குலம் (ரவீந்திரராஜா – முள்ளிவாய்க்கால்), அலெக்ஸ் (வடலியடைப்பு), வேந்தன்- அளவக்கை), சோக்கிரட்டீஸ் – அளவக்கை), தீசன் (பேனாட் – பள்ளிமுனை), ரெலா றோஜன் (விடத்தல்தீவு) ஆகியோரின் 36ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று..Posted by plotenewseditor on 27 December 2023
Posted in செய்திகள்
27.12.1987இல் முருங்கனில் மரணித்த தோழர்கள் குலம் (ரவீந்திரராஜா – முள்ளிவாய்க்கால்), அலெக்ஸ் (வடலியடைப்பு), வேந்தன்- அளவக்கை), சோக்கிரட்டீஸ் – அளவக்கை), தீசன் (பேனாட் – பள்ளிமுனை), ரெலா றோஜன் (விடத்தல்தீவு) ஆகியோரின் 36ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று..Posted by plotenewseditor on 27 December 2023
Posted in செய்திகள்
கொழும்பில் குடிசை வீடுகளில் வசிக்கும் மக்களுக்கு வீடுகளைப் பெற்றுக்கொடுக்கும் துரித வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பிலுள்ள 26 தோட்டங்களில் 61,000 இற்கும் அதிகமான மக்கள் வசித்து வருவதாக அமைச்சின் செயலாளர் W.S.சத்யானந்த குறிப்பிட்டார். அவர்களுக்கு வீடுகளை வழங்குவதற்கான புதிய யோசனை, அண்மையில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தினூடாக நிறைவேற்றப்பட்டது. இதன் கீழ் தோட்டங்களில் குடிசை வீடுகளில் வசிப்பவர்களுக்காக உள்நாட்டு மற்றும் வௌிநாட்டு முதலீட்டாளர்களினால் வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன. Read more
Posted by plotenewseditor on 26 December 2023
Posted in செய்திகள்
26.12.2005இல் இறம்பைக்குளத்தில் மரணித்த தோழர் சர்ச்சில் (திருப்பதி மாஸ்டர்- வீரப்பன் திருப்பதி- சமயபுரம்) அவர்களின் 18ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…
Posted by plotenewseditor on 26 December 2023
Posted in செய்திகள்
சுனாமி ஆழிப்பேரலை கோரத்தாண்டவத்தின் 19ம் ஆண்டு நினைவு நாள்.Posted by plotenewseditor on 26 December 2023
Posted in செய்திகள்
ஈர விழிகளுடன் நினைவுகூருகின்றோம்!Posted by plotenewseditor on 26 December 2023
Posted in செய்திகள்
எமது கட்சி உறுப்பினரும் வவுனியா சின்னபுதுக்குளம் வெளிக்குளம் வட்டார இணைப்பாளருமாகிய சிறிஸ்கந்தராஜா அருணன் அவர்கள் அகில இலங்கை சமாதான நீதவானாக நீதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
Posted by plotenewseditor on 26 December 2023
Posted in செய்திகள்
அண்மையில் உயிரிழந்த யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவியின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்தில் முறைப்பாடளித்துள்ளனர். டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் கடந்த 23 ஆம் திகதி உயிரிழந்தார். குறித்த மாணவிக்கு செலுத்தப்பட்ட மருந்தின் ஒவ்வாமை காரணமாகவே அவர் மரணித்ததாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், மாணவியின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக தெரிவித்து உயிரிழந்த மாணவியின் உறவினர்கள், தெல்லிப்பழை காவல் நிலையத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளனர். Read more
Posted by plotenewseditor on 26 December 2023
Posted in செய்திகள்
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிடம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர்(CID) விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். சர்ச்சைக்குரிய மருந்து கொடுக்கல் – வாங்கல் தொடர்பில் இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்று(260 காலை 9 மணி முதல் கெஹெலிய ரம்புக்வெல்லவிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர். இதனிடையே, சர்ச்சைக்குரிய மருந்து கொடுக்கல் – வாங்கல் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அரச இரசாயனப் பகுப்பாய்வாளருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. Read more
Posted by plotenewseditor on 25 December 2023
Posted in செய்திகள்
கொவிட் – 19 வைரஸின் ‘JN-1’ என்ற உப திரிபினால் இலங்கைக்கு ஏற்படும் பாதிப்புகள் மிகக்குறைவு என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக இலங்கையில் பதிவாகும் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்து வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கொவிட் – 19 வைரஸின் ‘JN-1’ என்ற உப திரிபின் அபாயத்தை மதிப்பிடுவதற்கு மரபணு பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், அதன்படி அந்த நிறுவனம் ஏற்கனவே பரிசோதனைகளை மேற்கொண்டு வருவதாகவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 25 December 2023
Posted in செய்திகள்
நத்தார் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் வவுனியா சிறைச்சாலையிலிருந்து கைதிகள் இன்று(25) விடுதலை செய்யப்பட்டனர். நத்தார் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் 1,004 சிறைக்கைதிகள் இன்று(25) விடுவிக்கப்படுகின்றனர். அதனடிப்படையில், வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையிலிருந்து 23 கைதிகள் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் அதிகாரிகள் முன்னிலையில் விடுதலை செய்யப்பட்டனர். சிறு குற்றங்களை புரிந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தவர்களே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.