Header image alt text

06.12.2021இல் கிளிநொச்சியில் மரணித்த தோழர் திலக் (வயிரவன் சிவபாலன் – கரியாலை, நாகபடுவன்) அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவுநாள் இன்று…..

சீனாவிடம் முன்பதிவு செய்யப்பட்ட 2 நவீன Y-12-IV விமானங்கள் நாட்டை வந்தடைந்துள்ளன. குறித்த இரண்டு விமானங்களும் இலங்கை விமானப் படையிடம் நேற்று (05) உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படவுள்ளது. Y-12_IV விமானங்கள் இரத்மலானை விமானப்படை தளத்தில் தரையிறக்கப்பட்டுள்ளன.

மத்தளை சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாடுகளை ரஷ்ய – இந்திய கூட்டு தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் நேற்று(05) இடம்பெற்ற கலந்துரையாடல் வெற்றியடைந்ததாக, துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் K.D.S.ருவன்சந்திர தெரிவித்துள்ளார். அதற்கமைய, எதிர்வரும் நாட்களில் குறித்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படவுள்ளது. இதன் கீழ் மத்தளை விமான நிலையத்தின் அனைத்து நடவடிக்கைகளும் குறித்த நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படும். Read more

இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே, இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டேவை சந்தித்துள்ளார். புது டெல்லியிலுள்ள இராணுவ தலைமையகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பிலான மாநாட்டில் பங்கேற்றதன் பின்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பியுள்ளார். ஜனாதிபதி நேற்றிரவு(04) நாடு திரும்பியதாக கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

தோழர் நிசாந்தன் அவர்களின் ஐந்தாம் ஆண்டு நினைவுநாள் இன்று…..
அமரர் பொன்னுத்துரை அசோகன் (தோழர் நிசாந்தன் – அச்சுவேலி)
மலர்வு : 1967.04.10
உதிர்வு: 2018.12.04

எதிர்வரும் அனைத்து தேர்தலில் கட்புலனற்றோருக்கான விசேட வாக்குச் சீட்டுகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்தகைய நபர்களுக்காக அனைத்து வாக்களிப்பு நிலையங்களுக்கும் வாக்குச் சீட்டுகள் விநியோகிக்கப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

நன்றி தலைவர் அவர்களே!
கௌரவ அமைச்சர் இந்த அமைச்சுப் பதவியை ஏற்கின்ற நேரத்திலே ஏறக்குறைய 70ற்கு மேற்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் சிறைச்சாலையில் இருந்தார்கள். இன்று 14 கைதிகளாக மாறியிருக்கின்றது. இந்த அரசியல் கைதிகள் சம்பந்தமாக ஜனாதிபதி அவர்கள் தொடர்ந்து பல கலந்துரையாடல்களை நடத்தினார். அதிலே கௌரவ அமைச்சர் அவர்களும் கலந்து கொண்டிருந்தார். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இருக்கின்ற இந்த அரசியல்கைதிகளை விடுவிக்க வேண்டுமென்ற ஒரு முடிவு அப்போது எடுக்கப்பட்டது. அந்தமுடிவை மிக ஆர்வத்துடனும், மனிதாபிமானத்துடனும் அணுகி இவர்கள் மிக விரைவாக விடுவிக்கப்பட வேண்டுமென்று நீதி அமைச்சர் அவர்கள் பாடுபட்டு அவர்களில் பலரை விடுவித்திருக்கின்றார்.

Read more

யாழ்.சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த​ போது 28 வயதான இளைஞரொருவர் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய 04 பொலிஸ் உத்தியோகத்தர்களும் எதிர்வரும் 08 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களை அன்றைய தினம் அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துமாறு யாழ்.நீதவான் இன்று(04) உத்தரவிட்டுள்ளார். சம்பவத்துடன் தொடர்புடைய 04 பொலிஸ் உத்தியோகத்தர்களையும் அடையாள அணிவகுப்பிற்கு இன்று உட்படுத்த கடந்த தவணை வழக்கு விசாரணையின் போது உத்தரவிடப்பட்டிருந்தது. Read more

அரச வங்கிகளை தனியார் மயமாக்குவதற்கு ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது என இலங்கை வங்கி ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கை வங்கி ஊழியர்களின் தேசிய மாநாட்டில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளனர்.