தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க உள்ளிட்ட தூதுக்குழுவினர் மற்றும் இந்திய வௌியுறவுத்துறை அமைச்சர், கலாநிதி S.ஜெய்ஷங்கர் ஆகியோருக்கு இடையே இன்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க தலைமையிலான குழுவினர் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர். இந்திய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் அவர்கள் இந்த விஜயத்தில் ஈடுபட்டுள்ளனர். அனுர குமார திசாநாயக்கவுடன், கட்சியின் செயலாளர் நிஹால் அபேசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், தேசிய செயற்குழு உறுப்பினர் அனில் ஜயந்த ஆகியோர் இந்த விஜயத்தில் இணைந்துள்ளனர்.