Header image alt text

கழகத்தின் முன்னைநாள் மட்டு அம்பாறை திருமலை பிராந்திய பொறுப்பாளர் தோழர் G. T. R. அவர்களின் 50,000/- நிதிப்பங்களிப்புடன் வெள்ள நிவாரணம் வழங்கி வைக்கப்பட்டது. இதன்படி வவுணதீவு பிரதேசத்தில் புதுமண்டபத்தடி, கரையாக்கன்தீவு, நடராசானந்தபுரம், இருட்டுச்சோலைமடு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 25 குடும்பங்களுக்கு தலா 2,000/- ரூபா பெறுமதியான உலருணவுப் பொதிகள் கட்சியின் துணைத்தலைவர் பொன். செல்லத்துரை அவர்களால் இன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

Read more

நிகழ்நிலை காப்பு சட்டத்தின் சில பிரிவுகள் உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்துடன் இணங்கவில்லை என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சபாநாயகருக்கு அறிவித்துள்ளது. இந்த குறைபாடுகள் தொடர்பில் தாம் மிகுந்த கவலையடைவதாக மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் L.T.B. தெஹிதெனியவின் கையொப்பத்துடன் சபாநாயகருக்கு அனுப்பப்பட்டுள்ள இந்த கடிதத்தின் பிரதிகள், ஜனாதிபதி, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் சட்ட மா அதிபருக்கும் அனுப்பப்பட்டுள்ளன. Read more

தேசிய பண்ணை விலங்கு அபிவிருத்தி சபைக்கு சொந்தமான பண்ணைகளை பார்வையிடுவதற்காக இந்தியாவின் அமுல் (Amul) நிறுவன பிரதிநிதிகள் குழுவொன்று நாட்டிற்கு வருகை தந்துள்ளது. அவர்கள் நேற்று முதல் பண்ணைகளை ஆய்வு செய்ய ஆரம்பித்துள்ளதாக தேசிய பண்ணை விலங்கு அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது. அந்த பண்ணைகளின் எதிர்கால மேம்பாட்டுத் திட்டங்களை அமுல் நிறுவன பிரதிநிதிகள் குழு நடைமுறைப்படுத்தவுள்ளது. தேசிய பண்ணை விலங்கு அபிவிருத்தி சபைக்கு சொந்தமான 31 பண்ணைகள் 28,000 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பில் காணப்படுகின்றன. Read more