Header image alt text

மருந்து விநியோகப்பிரிவின் முன்னாள் பணிப்பாளர்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மருந்து கொடுக்கல் – வாங்கலில் முன்னெடுக்கப்பட்ட நடைமுறை தொடர்பில் இவ்வாறு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைவாக இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சர்ச்சைக்குரிய ஹியூமன் இமியுனோகுளோபியூலின் மருந்து கொடுக்கல் – வாங்கல் தொடர்பான விசாரணைகளின் தொடர்ச்சியாக முன்னாள் பணிப்பாளர்களிடமும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. Read more

அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற இந்து சமுத்திர மாநாட்டில் கலந்துகொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட குழுவினர் இன்றுகாலை நாடு திரும்பினர். ஶ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்றின் மூலம் அவர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர். இந்த வருடம் ஜனாதிபதி தேர்தலையும் பொதுத் தேர்தலையும் நடத்தவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிமரசிங்க தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.