Header image alt text

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர்களில் ஒருவரும், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினதும் அதன் மக்கள் முன்னணியான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியினதும் சிரேஷ்ட உபதலைவரும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் செயலாளருமான தோழர் வேலாயுதம் நல்லநாதர் (இராகவன், ஆர்.ஆர்) இன்று இயற்கையெய்தினார். அவருக்கு எமது வீர அஞ்சலிகள்.
இறுதி நிகழ்வு பற்றிய வியரம் பின்னர் அறியத்தரப்படும்

எல்லை தாண்டி மீன் பிடியில் ஈடுபட்டமைக்காக இம்மாதம் 8 ஆம் திகதி கைது செய்யப்பட்ட 18 தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மீனவர்கள் பயணித்த படகொன்று அரசுடைமையாக்கப்பட்டுள்ளதுடன், படகோட்டி ஒருவருக்கு 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நெடுந்தீவு கடற்பரப்பில் இரண்டு படகுகளுடன் எல்லை தாண்டி மீன்பிடித்துக்கொண்டிருந்த போது 19 தமிழக மீனவர்களும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர். கடற்படையினரால் ஒப்படைக்கப்பட்ட தமிழக மீனவர்களை யாழ். மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகள் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். Read more

ஆரம்பப்பிரிவில் கல்வி கற்கும் அனைத்து மாணவர்களுக்கும் அடுத்த மாதம் முதல் இலவச உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய, தரம் 1 முதல் 5 வரை கல்வி பயிலும் 17 இலட்சம் மாணவர்களுக்கு இலவச உணவு வழங்கப்படவுள்ளது. காலை 7.30 க்கு ஆரம்பப்பிரிவு மாணவர்களுக்கு உணவு வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படும் சிறுவர்கள் தொடர்பில் சுகாதாரத்துறை வௌிக்கொணர்ந்த விடயங்களை கருத்திற்கொண்டு இந்த திட்டம் செயற்படுத்தப்படவுள்ளது. Read more