Header image alt text

ஆரம்பப் பிரிவில் கல்வி கற்கும் அனைத்து மாணவர்களுக்கும் மார்ச் மாதம் முதல் இலவச மதிய உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமென கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. நாட்டில் அதிகளவான சிறுவர்கள்  போஷாக்கு குறைப்பாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அண்மையில் தெரிவித்திருந்தது. இதனையடுத்தே அரசு இத்தீர்மானத்தை எடுத்துள்ளது. அதற்கமைய, தரம் ஒன்று முதல் ஐந்து வரை கல்வி பயிலும் 17 இலட்சம் மாணவர்களுக்கு இலவச மதிய உணவு வழங்கப்படவுள்ளது. இந்த உணவு வழங்கும் திட்டத்துக்காக 16.6 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட செயன்முறையின் அடிப்படையில், பொது சுகாதார பரிசோதகர்களின் மேற்பார்வையில் உணவு தயாரிக்கப்படுமெனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

செய்திக் குறிப்பு-

Posted by plotenewseditor on 23 February 2024
Posted in செய்திகள் 

எமது கழகத்தினதும் அதன் மக்கள் முன்னணியான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியினதும் சிரேஷ்ட உபதலைவரான, தோழர் வேலாயுதம் நல்லநாதர் (இராகவன், ஆர்.ஆர்) அவர்களின் இறுதிக் கிரியைகள், வவுனியா கோவில்குளத்தில் அமைந்துள்ள கட்சியின் மாவட்டத் தலைமையகத்தில் நாளைமறுதினம் (25.02.2024) நடைபெற்று, தொடர்ந்து அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று நல்லடக்க நிகழ்வும் நடைபெறும்.
⁃ அஞ்சலி நிகழ்வு ஏற்பாட்டுக்குழு

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் முகாமைத்துவம் மற்றும் வளங்களுக்கான பிரதி இராஜாங்க செயலாளர் ரிச்சர்ட் வர்மாவுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று முற்பகல் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு, வர்த்தகம் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. தமது இலங்கை விஜயத்தின் போது அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பிரதி இராஜாங்க செயலாளர் ரிச்சர்ட் வர்மா, கொழும்பு துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனையம் உள்ளிட்ட இடங்களுக்கும் விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Read more

இலங்கையின் சனத்தொகையில் 40 வீதமானோருக்கு கடவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அண்ணளவாக 92 இலட்சம் பேருக்கு கடவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்தவகையில், நாட்டின் மொத்த மக்கள் தொகை கிட்டத்தட்ட 22 கோடி அவர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் கடவுச்சீட்டு பெற்றுள்ளதாகவும் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது. இந்நிலையில், நாட்டில் இலத்திரனியல் கடவுச்சீட்டு சேவையை அறிமுகப்படுத்த தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more