பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் நாளை முதல் இரண்டு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட தயாராகி வருகின்றனர். சம்பள பிரச்சினையை சுட்டிக்காட்டி இந்த அடையாள வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படவுள்ளது. தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் சம்பளத்தை அதிகரிக்கக் கோரி பல்கலைக்கழக கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்கள் அண்மைக்காலமாக பல்வேறு தொழிற்சங்க நடவடிக்கைகளை மேற்கொண்டனர். எவ்வாறாயினும், அண்மையில் அரசாங்கம் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களுக்கான கொடுப்பனவுகளை அதிகரிக்க நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.