Header image alt text

துயர் பகிர்வோம்!

Posted by plotenewseditor on 2 February 2024
Posted in செய்திகள் 

கழகத் தோழர் பாலா (UK) அவர்களின் சகோதரர் சங்கரப்பிள்ளை பாலச்சந்திரன் அவர்கள் 27.01.2024 அன்று இலண்டனில் காலமானார். அவரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களோடு நாமும் இப் பெருந்துயரினை பகிர்ந்து கொண்டு அன்னாருக்கு எமது இதயபூர்வ அஞ்சலியையும் சமர்ப்பிக்கின்றோம்.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(DPLF)

Read more

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம்  இன்று குற்றவியல் விசாரணை திணைக்களத்தினர் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். சர்ச்சைக்குரிய Human Immunoglobulin மருந்து கொடுக்கல் வாங்கல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு அவர் இன்று முற்பகல் சென்றிருந்தார்.   சர்ச்சைக்குரிய மருந்து கொடுக்கல் வாங்கல் தொடர்பில் குற்றவியல் விசாரணை திணைக்களத்திடம் வாக்குமூலம் வழங்குமாறு முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு மாளிகாகந்த நீதவான் லோச்சனா அபேவிக்ரம நேற்று உத்தரவிட்டிருந்தார். Read more

நிகழ்நிலை காப்பு சட்டமூலம், பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் FORUM-ASIA அமைப்பு அறிக்கையொன்றை வௌியிட்டுள்ளது. இந்த அமைப்பு 23 நாடுகளில் செயற்படும் 85 ஆசிய நாடுகளின் உறுப்பினர்களைக் கொண்ட ஒரு பிராந்திய மனித உரிமைகள் அமைப்பாகும். சம்பந்தப்பட்ட சட்டமும் சட்டமூலமும் நாட்டு மக்களின் மனித உரிமைகளுக்கும் சுதந்திரத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என அவ்வமைப்பு கூறியுள்ளது. பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தில் உள்ள பயங்கரவாதத்தின் பரந்த வரையறை, வரையறுக்கப்பட்ட நீதித்துறை மேற்பார்வை, மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்குள்ள வரம்புகள் FORUM-ASIA-வின் கரிசனையை ஈர்த்துள்ளன. Read more

பொலிஸ்மா அதிபரின் நியமனத்தை அடிப்படையாகக் கொண்டு அரசியலமைப்பு பேரவை மற்றும் ஜனாதிபதியின் அதிகாரங்கள் தொடர்பில் விடயங்களை தெளிவுபடுத்தி ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் ஊடக அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.  ‘ஜனாதிபதி மற்றும் அரசியலமைப்பு பேரவையின் அரசியலமைப்பு ரீதியான பொறுப்பை நிறைவேற்றுதல்’ என்ற தலைப்பில் இந்த ஊடக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.  அரசியலமைப்பின் மூலம் நிறுவப்பட்ட பாராளுமன்றத்தில் சபாநாயகர் தலைமையிலான அரசியலமைப்பு பேரவை நிறைவேற்று அதிகாரத்தின் ஒரு பகுதியாக செயற்படுவதாகவும், ஜனாதிபதி அரசியலமைப்பிற்கு அமைவான பணிகளை முன்னெடுப்பதற்கான ஒத்துழைப்பையும் அரசியலமைப்புப் பேரவை வழங்குவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more

நாளை (02) காலை 09 மணிக்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு சென்று வாக்குமூலம் வழங்க வேண்டுமென அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு மாளிகாகந்த நீதவான் லோச்சனா அபேவிக்ரம இன்று உத்தரவிட்டுள்ளார். போலி Human Immunoglobulin கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மினி கிரியாகம விடுத்த கோரிக்கையை கருத்திற்கொண்டு நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார். Read more