வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் ஆஜரானார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அண்மையில் வௌியிட்ட கருத்து குறித்து வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் திணைக்களத்தில் ஆஜராகியிருந்தார். இன்று காலை 10 மணியளவில் திணைக்களத்திற்கு சென்ற முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சுமார் 02 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்ததாக குற்றவியல் விசாரணை திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வௌியிட்ட கருத்து குறித்து இதற்கு முன்னரும் அவர் குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் வாக்குமூலம் பதிவு செய்துள்ளார்.