ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA)யின் மன்னார் மாவட்டக் குழுவின் அங்குரார்ப்பணக் கூட்டம் நேற்றுப் பகல் 11.00 மணியளவில் மன்னாரில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், கூட்டணியின் இணைத்தலைவர்களில் ஒருவரான செல்வம் அடைக்கலநாதன்(நா.உ), செயலாளர் நா. இரட்ணலிங்கம், தேசிய அமைப்பாளர் கோ.கருணாகரம் (ஜனா) நா.உ., மற்றும் கூட்டணியின் மன்னார் மாவட்ட உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது ஒவ்வொரு கட்சியிலும் இருந்து தலா மூன்று பிரதிநிதிகள் அடங்கலான மாவட்டக்குழு உருவாக்கப்பட்டது. அத்துடன் எதிர்காலத்தில் கூட்டணி சார்பாக, மாவட்டக் குழுவுக்கு இருக்கக்கூடிய பணிகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.
