பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பை இன்று முதல் மேலும் வலுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்காமையே இதற்கான காரணமாகும். அதற்கிணங்க, பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு 14ஆவது நாளாக இன்று முன்னெடுக்கப்படுகின்றது.