Header image alt text

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்டது. இதன்போது யுத்தத்தில் உயிரிழந்தோர்க்கான ஆத்ம சாந்திப் பிரார்த்தனை, மலரஞ்சலி செலுத்துதல், தீபமேற்றுதல் போன்ற நிகழ்வுகள் இடம்பெற்றன. இந் நினைவேந்தலில் புளொட் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், கட்சியின் பொருளாளரும் முன்னாள் மாகாணசபை அமைச்சருமான க.சிவநேசன், கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான பா.கஜதீபன், கட்சியின் சாவகச்சேரி முன்னாள் நகரசபை உறுப்பினர் கிசோர், கட்சியின் முன்னாள் சாவகச்சேரி பிரதேசசபை உபதவிசாளர் மயூரன், கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளர் க.தவராஜா மாஸ்டர், கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் கௌதம் உள்ளிட்டோர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.

Read more

முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் இறுதி நாட்களில் அங்கிருந்து காயப்பட்ட மக்களை மருத்துவ உதவி நிறுவனங்களும் தொண்டர்களும் இராணுவத்தினரும் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு வந்து குவித்தவண்ணமும், அங்கிருந்து முகாம்களுக்கு அனுப்பிய வண்ணமும் இருந்தார்கள். இக்கால கட்டத்தில் புளொட் தோழர்கள் வைத்தியசாலையிலும் முகாங்களிலும் இருந்த மக்களுக்கு தம்மால் இயன்ற உணவு வசதிகள் வேறு அத்தியாவசிய தேவை வசதிகள் என்பவற்றை செய்துகொண்டிருந்தார்கள்.

Read more