கல்முனை கடற்கரை வீதியைச் சேர்ந்தவரும், அமரர் தோழர் ஜெகன் அவர்களின் துணைவியாருமான மகிந்தன் பாக்கியவதி அவர்களுக்கு சுயதொழில் முயற்சிக்காக இன்று 80ஆயிரம் ரூபாய் பெறுமதியில் தையல் இயந்திரம் மற்றும் அதற்கான உபகரணங்களைப் பெற்றுக் கொள்வதற்கான ஒரு தொகை நிதியும் கட்சியின் துணைத் தலைவர் தோழர் கேசவன் அவர்களால் வழங்கிவைக்கப்பட்டது. லண்டனில் வசிக்கும் தோழர் அல்வின் அவர்கள் இதற்கான நிதியுதவியினை வழங்கியிருந்தார்.