முல்லைத்தீவு விசுவமடு ரெட்பானா வள்ளுவர்புரம் ‘நிலா முற்றம்’ மகளிர் அமைப்பின் ஓராம் ஆண்டு நிறைவு விழா நேற்றையதினம் இடம்பெற்றது. நிகழ்வில் கட்சியின் பொருளாளர் க.சிவநேசன், கட்சியின் கனேடிய கிளையின் அமைப்பாளர் திரு. கந்தசாமி அவர்கள், கட்சியின் இளைஞர் பிரிவு பொறுப்பாளரும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் மாவட்டக்குழு இணைப்பாளருமான ஜூட்சன், கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளர் க.தவராஜா மாஸ்டர், கட்சியின் மாவட்ட மகளிர் பிரிவு பொறுப்பாளர் கேதினி, கட்சியின் புதுக்குடியிருப்பு முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் கிருபாலினி, கட்சியின் முள்ளிவளை பிரதேச அமைப்பாளர் சஞ்சீவன் மற்றும் மகளிர் பிரதிநிதிகளும் கலந்து சிறப்பித்திருந்தார்கள்.