அமரர் வை.விஜயநாதன் அவர்களின் எட்டாம் ஆண்டு நினைவாக நுவரெலியா தலவாக்கலை வாழைமலை தோட்டத்தில் அமைந்துள்ள ஆக்ரா அறநெறிப் பாடசாலையைச் சேர்ந்த 44 பிள்ளைகளுக்கு இன்று (02.06.2024) விசேட மதிய உணவு வழங்கப்பட்டுள்ளது. ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் சுவிஸ் உறுப்பினர் திரு. விஜயநாதன் ரட்ணகுமார் அவர்கள் தனது தந்தையாரான இளைப்பாறிய இலங்கை நீதிமன்ற முதலியார் அமரர் வைத்திலிங்கம் விஜயநாதன் அவர்களின் எட்டாம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு வழங்கிய நிதியில் கட்சியின் சமூக மேம்பாட்டுப் பிரிவின் ஊடாக ஏழாவது செயற்பாடாக இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

தலவாக்கலை பிரதேச மகளிர் ஒருங்கிணைப்பாளரும், ஆக்ரா அறநெறிப் பாடசாலையின் ஆசிரியையுமான தமிழ்ச்செல்வி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் திம்புள்ள தமிழ் வித்தியாலய ஆசிரியர் திரு. பூபாலன், தொழிற்பயிற்சி அதிகாரசபை ஆசிரியை லோகேஸ்வரி, தலவாக்கலை சத்தியசாயி நிலைய செயலாளர் திரு. இராமையா, ஆக்ரா அறநெறிப்பாடசாலை ஆசிரியை செல்வி தமிழ்க்குமாரி ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள்.