எமது கட்சியின் மகளீர் அமைப்பின் வருடாந்த ஒன்றுகூடலும் கௌரவிப்பும் முல்லைத்தீவு, குமுழமுனை, தண்ணீரூற்று அரிமத்தியா ஆலய மண்டபத்தில் இன்று பிற்பகல் 2.00மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது. இந்நிகழ்விற்கு கனடா தோழர்கள் கந்தசாமி, விஜயன், குணபாலன், லண்டன் தோழர்கள் த.சிவபாலன், வேந்தன் ஆகியோர் அனுசரணை வழங்கியிருந்தார்கள். கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட மகளிர் பிரிவுப் பொறுப்பாளர் திருமதி கேதினி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினராக யாழ். பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞானபீட விரிவுரையாளர் பேராசிரியர் கணேசலிங்கம் அவர்களும் கலந்து கொண்டிருந்தார்கள்.

கௌரவ விருந்தினர்களாக எமது கட்சியின் பொருளாளரும், முன்னைநாள் வடமாகாண விவசாய அமைச்சருமான க.சிவநேசன்(பவன்), கட்சியின் கனேடிய கிளையின் அமைப்பாளர் கந்தசாமி, கட்சியின் உபதலைவரும், ஊடகப் பொறுப்பாளருமான ஆர்.தயாபரன், கட்சியின் தேசிய அமைப்பாளர் ஆ.ஸ்ரீஸ்கந்தராஜா(பீற்றர்), கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான பா.கஜதீபன், கட்சியின் இளைஞர் பிரிவுப் பொறுப்பாளர் யூட்சன், கட்சியின் மகளிர் பிரிவு பொறுப்பாளர் க.சந்திரவதனா,
கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளரும், கரைதுறைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான தவராஜா மாஸ்டர், ஜனநாயக போராளிகள் கட்சியின் திருமலை மாவட்ட பொறுப்பாளர் மேனன், கட்சியின்திருகோணமலை மாவட்ட மகளிர் பிரிவு பொறுப்பாளர் வசந்தினி, கட்சியின் யாழ். மாவட்ட மகளிர் பிரிவு பொறுப்பாளர் செல்வி, கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட மகளிர் பிரிவு பொறுப்பாளர் கேதினி,
கட்சியின் கிளிநொச்சி மாவட்ட மகளிர் பிரிவு பொறுப்பாளர் பிரசாந்தினி, கரைதுறைப்பற்று பிரதேசசபையின் முன்னாள் உறுப்பினரும், கட்சியின் பிரதேச அமைப்பாளருமான கவாஸ்கர், மாவட்ட இளைஞர் பிரிவு பொறுப்பாளர் மயூரன்,
முன்னாள் புதுக்குடியிருப்பு மகளிர் பிரிவு பொறுப்பாளரும், முன்னாள் புதுக்குடியிருப்பு பிரதேசசபை உறுப்பினருமான கிருபாஜினி, ஒரு வருடம் பூர்த்தியடைந்த கட்சியின் பதினெட்டு மகளிர் அமைப்புக்களின் தலைவர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட உறுப்பினர்கள், பிரதேச முக்கியஸ்தர்களான புஸ்பன், ரங்கன், சஞ்சய் மற்றும் உதயன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள்.
ஆரம்ப நிகழ்வாக விருந்தினர் வரவேற்பு, மங்கள விளக்கேற்றல், மௌனப் பிரார்த்தனை, வரவேற்புரை, வரவேற்பு நடனம் என்பன இடம்பெற்று, தலைமையுரை, நடனங்கள், மகளிர் பிரதிநிதிகள் உரை, விருந்தினர்கள் உரை என்பவற்றைத் தொடர்ந்து ஒரு வருட பூர்த்தி அடைந்த 18 மகளிர் அமைப்புக்களின் தலைவிகள் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன்,
கலந்து கொண்ட அனைத்து மகளிர் அமைப்புக்களின் உறுப்பினர்களுக்கும் சான்றிதழ் மற்றும் நினைவுப்பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டது.
முன்னாள் புதுக்குடியிருப் பிரதேச மகளிர் அமைப்பு தலைவியும், முன்னாள் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினருமான கிருபாஜினி அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்வு நிறைவுபெற்றது.