Header image alt text

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) செயலதிபர் அமரர் தோழர். முகுந்தன் (க. உமாமகேஸ்வரன்) அவர்களின் உருவச்சிலை இன்று வவுனியா நகரில் அவரது உருவச்சிலைக்குரிய பீடத்தில் ஏற்றப்பட்டது. வீரமக்கள் தினத்திற்கு முன்பாக உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட உள்ளது. Read more

09.06.1985இல் மரணித்த தோழர் சுதன் (மா.சிவஞானம்) அவர்களின் 39ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று……

2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு பதிலாக இடைக்கால கணக்கறிக்கை சமர்ப்பிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். ருவன்வெல்லயில் இன்று முற்பகல் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இவ்வருடம் தேர்தல் வருடம் என்பதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் கூறினார். அதற்கமைய, 2025ஆம் ஆண்டின் முதல் சில மாதங்களுக்காக இடைக்கால கணக்கறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று காலை இந்தியாவிற்கு புறப்பட்டு சென்றுள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வதற்காக அவர் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். பதவியேற்பு விழா ராஷ்டிரபதி பவனில் இன்று(09) மாலை நடைபெறவுள்ளதுடன், 18ஆவது மக்களவையின் பதவியேற்பு விழாவிற்கு பல நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. Read more