Header image alt text

10.06.1997இல் மரணித்த தோழர் சங்கர் (தம்பிராசா ராஜதுரை) அவர்களின் 27ம் ஆண்டு நினைவுகள்

10-06-2020 அன்று ஜெர்மனியில் மரணித்த கழகத்தின் சண்டிலிப்பாய் பிரதேச முன்னாள் பொறுப்பாளர் தோழர் கௌரி (விஜயராஜா கெளரீஸ்வரன் – சண்டிலிப்பாய்) அவர்களின் நான்காம் ஆண்டு நினைவுநாள் இன்று.. 1986 பிற்பகுதியில் கழகம் தனது செயல்பாடுகளை தளத்தில் தற்காலிகமாக இடைநிறுத்தியபோது பல கிழக்கு மாகாண தோழர்களை பாதுகாப்பாக வைத்திருந்து அவர்களின் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைத்த அவரது உதவிகள் என்றும் நினைவுகூரத்தக்கது.
10.06.1991இல் வவுனியா நொச்சிமோட்டையில் மரணித்த தோழர் மதி (முருகேசு ரத்தினவேல் – முகத்தான்குளம்) அவர்களின் 33ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று….

தொடருந்து இயந்திர இயக்குநர்கள் சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வந்த பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டுள்ளது. பதவி உயர்வு தாமதமாதல் உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வைத்து கடந்த 6ஆம் திகதி நள்ளிரவு முதல் இரண்டு தொடருந்து முனையங்களைச் சேர்ந்த சுமார் 80 தொடருந்து இயந்திர இயக்குநர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவுடனான பேச்சுவார்த்தையில் இணக்கம் ஏற்பட்டதையடுத்து பணிப்புறக்கணிப்பை கைவிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக தொடருந்து இயந்திர இயக்குநர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது. Read more

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் இந்திய சிரேஷ்ட அமைச்சர், கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று இடம்பெற்றது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பதவிப்பிரமாண நிகழ்விற்காக ஜனாதிபதி இந்தியா சென்றுள்ள நிலையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்திய முதலீட்டில் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டு இடைநடுவில் தடைப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்களை துரிதமாக மீள ஆரம்பிப்பது குறித்து இங்கு ஆராயப்பட்டதுடன், இந்த செயற்பாடுகளை ஆராய்வதற்காக விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யவிருப்பதாக கலாநிதி ஜெய்சங்கர் தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. Read more