ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் சார்க் அமைப்பின் செயலாளர் நாயகம் கோலம் சர்வார்க்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று முற்பகல் குறித்த சந்திப்பு இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. சார்க் நாடுகளுக்கிடையிலான பல்வேறு திட்டங்கள் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பில் இந்த சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்தப் பிரச்சினைகள் தொடர்பில் பாரபட்சமின்றி தலையீடு செய்யுமாறு சார்க் செயலாளர் நாயகத்திடம் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
அதேநேரம், இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுவரும் விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டம் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், அதற்காக சார்க் நாடுகளின் ஆதரவைப் பெறுவது குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், இலங்கையில் சார்க் கலாசார மையத்தை நவீன கலைகளுக்காக மேம்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.