ஜெர்மனியில் வசிக்கும் தோழர் கந்தசாமி சந்திரன் அவர்களின் பிறந்தநாளை (19.06.2024) முன்னிட்டு இன்றையதினம் (20.06.2024) நாவற்காடு முள்ளியவளையில் அமைந்துள்ள குபேரன் மகளிர் அமைப்புக்கு சுழற்சி முறை கடன்திட்டத்துக்கு மூலதன நிதி வழங்கப்பட்டது. மேற்படி வைபவத்தில் கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளரும், கரைதுறைப்பற்று பிரதேசசபையின் முன்னாள் தவிசாளருமான தவராசா மாஸ்ரர், கட்சியின் இளைஞர் பிரிவுப் பொறுப்பாளர் யூட்சன், கிராம அபிவிருத்தி சங்கத்தலைவர் புஸ்பராசா ஆகியோர் கலந்துகொண்டு நிதியுதவியை வழங்கி வைத்தார்கள்.