20 இலட்சம் காணி உறுதிகள் வழங்கும் தேசிய வேலைத் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்றைய தினம் காணி உறுதிகள் வழங்கப்பட்டன. 13 பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த தகுதிபெற்ற 27,595 பேரில் 192 பேருக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் காணி உறுதிகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வானது மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் புதிய கட்டிடத்தில் இன்று நடைபெற்றது. இதன்போது உயர் தேசிய பொறியியல் நிறுவனத்தின் 252 ஆங்கில டிப்ளோமாதாரிகளுக்கான ஆசிரியர் நியமனங்களையும் ஜனாதிபதி வழங்கியுள்ளார்.